கோத்தபாய செயலாளர் அல்ல! பாதுகாப்பு அமைச்சராகவே செயற்படுகின்றார் : விக்ரமபாகு


பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போது நாடு பூராகவும் அரசியல் செய்து வருகின்றார். ஒரு அரச ஊழியர் இவ்வாறு செயற்பட முடியாது. அவர் பாதுகாப்பு செயலாளர் அன்றி பாதுகாப்பு அமைச்சராகவே செயற்படுகின்றார் என்று நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது நாட்டில் பெளத்த சாசனமும் சட்ட ஒழுங்கும் குப்பைக் கூடைக்குள் போடப்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார்.
கொழும்பில் நவசமசமாஜ கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது அரச ஊழியராக பணியாற்றி வரும் பாதுகாப்பு செயலாளர் நாடு பூராகவும் அரசியல் செய்து வருகின்றார். அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோருகின்றார். இவ்வாறு ஒரு அரச ஊழியரினால் கூற முடியாது.
ஆகவே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போது பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டு வருகின்றார். அதேபோன்று இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவும் இவ்வாறே செயற்படுகின்றார்.
எனவே, அரச ஊழியர்களுக்கு அரசியல் செய்ய முடியுமாயின் ஏன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது?
நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நாட்டின் உயர்மட்டத்தில் உள்ளவர்களே சதித்திட்டம் தீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பௌத்த சட்ட ஒழுங்கும் குப்பை கூடத்திற்குள் போடப்பட்டுள்ளது என்றார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger