வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்படும் பல்வேறு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளில் குழுக்கள், பௌத்தர்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் இடதுசாரி எனக் கூறிக்கொள்ளும் நபர்கள் இலங்கையில் பௌத்த பயங்கரவாதம் இருப்பதாக கூறுகின்றனர்.
தப்லிக் ஜமாத் அமைப்பு இலங்கைக்கு சமூகத்திற்குள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.
இதற்கு சிறந்த உதாரணத்தை அண்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைத்த தகவல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 800 புதிய முஸ்லிம் மாணவர்களை அந்நிய மதத்தினர் மற்றும் இனத்தவருடன் பழக இந்த அமைப்பினர் தடைவிதித்து உத்தரவிட்டதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
அத்துடன் தவ்ஹித் ஜமாத் அமைப்பு பௌத்த நம்பிக்கை மற்றும் புத்த பகவானுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment