ஹைதராபாத் கலவரம்: முஸ்லிம்களை கருவறுக்க திட்டமிடபட்டு நடத்தப்பட்டது – உண்மை கண்டறியும் குழு அறிக்கை!


கடந்த மே 24-ஆம் தேதி ஹைதராபாத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சீக்கியர்கள் நடத்திய கலவரம் திட்டமிட்டு கூட்டாக நடத்தப்பட்டது என்று குடியுரிமை கண்காணிப்பு குழு சார்பாக நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் விசாரணையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

1. சீக்கிய கொடியை எரித்ததே கலவரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இது உண்மைக்கு புறம்பானது. கொடி ஏற்றப்பட்டிருந்த திறந்த பகுதி வக்ஃப் நிலமாகும். ஹிந்துத்துவா கொள்கையுடன் நெருக்கமான சீக்கிய குழு ஒன்று அங்கு குருத்துவாரா கட்ட திட்டமிட்டிருந்தது.
2. கலவரத்தில் போலீசின் பங்கும் சந்தேகத்திற்கிடமானது. போலீஸின் துப்பாக்கிச் சூட்டில் வாஜித் அலீ, முஹம்மது சுஜாவுத்தீன், முஹம்மது ஃபரீத் ஆகியோர் கொல்லப்பட்டனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் கூறுகிறது. ஆனால், முடிந்தவரை முஸ்லிம்களை கொலை செய்வதே போலீஸின் நோக்கமாகும். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சில்தான் குண்டு பாய்ந்துள்ளது. உடலின் கீழ் பகுதிகளில் யாருக்கும் குண்டு பாயவில்லை.
3. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது போலீஸ் தடுத்தது. இதனால் நேரம் விரயமாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
4. காலையில் பெட்ரோல் நிரப்பிய கேன்களுடன் சீக்கியர்கள் முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். இது திட்டமிட்ட செயல் என்பதற்கான ஆதாரமாகும்.
5. துப்பாக்கிச் சூட்டிற்கான பொறுப்பை போலீஸ் ஏற்றுக்கொள்ள மறுப்பது கவலை அளிக்கிறது. துப்பாக்கிச் சூடு நடந்த இடம் தங்கள் எல்லைக்கு உட்பட்டது அல்ல என்று ஹைதராபாத் போலீசும், ஸைபராபாத் போலீசும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றனர்.
6. கலவரம் நடத்திய சீக்கியர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் முஸ்லிம்களின் உயிர்களுக்கும், சொத்துகளுக்கும் இழப்பு ஏற்பட்டிருக்காது.
7. முஸ்லிம்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கலவரம் நடந்தது உண்மைதான். 3 மணி நேரம் தாக்குதல் நடந்துள்ளது. போலீஸ் மற்றும் பி.எஸ்.எஃப் படையினரின் முன்னிலையிலேயே வன்முறையாளர்கள் வாள் மற்றும் கடாரியுடன் சுற்றி திரிந்துள்ளனர்.
8. ஹிந்துத்துவ சீக்கியர்கள் முற்றிலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் முன்னணி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிரசித்தி பெற்ற உள்ளூர் இந்துத்துவவாதி ராஜா சிங்கின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. வகுப்புவாத உணர்வுகளை தூண்டி ராஜா சிங் அண்மையில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்வாறு உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger