கருத்துக்கணிப்பு வாக்­கெ­டுப்பு மூலம் தனித்’தமிழீழம்’ அடைவது சாத்தியமா?

தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகக் கருத்துக்கணிப்பு


சரித்­தி­ரங்கள் அடுக்­க­டுக்­காக பல சாத­னை­களை நிகழ்த்தி வரு­கின்­றன. அது வெறும் கனவு என்று கூறப்­பட்ட விட­யங்கள் நன­வா­கி­யுள்­ளன.

இஸ்ரேல் என்ற நாடு உரு­வாக முடி­யாது. அது வெறும் கனவு என பல அர­சியல் ஆய்­வா­ளர்கள் ஆயிரம் வரு­டங்­க­ளுக்­குமேல் புள்ளி விப­ரங்­க­ளுடன் தெரி­வித்து வந்­தார்கள். ஆனால் பல அரபு நாடு­க­ளுக்கு மத்­தியில் ஒரு புள்­ளியை யூதர்கள் வைத்­தார்கள். அதுதான் இஸ்ரேல் என்­றார்கள்.
புலம்­பெ­யர்ந்து வாழ்ந்த இஸ்­ரே­லி­யர்கள் வரு­டத்­திற்கு ஒரு­முறை ஒன்று கூடு­வார்கள். அடுத்த முறை சந்­திக்­கும்­போது நாம் இஸ்ரேல் என்ற எமது தாய­கத்தில் ஒன்று கூடுவோம் என்று அதன்­போது உறுதி எடுத்துக் கொள்­வார்கள்.
பல தலை­மு­றைகள் தொடர்ச்­சி­யாக அவ்­வாறு உறு­தி­மொழி எடுத்­துக்­கொண்­டார்கள். எவ்­வ­ளவு காலம் இவ்­வாறு கன­வு­லகில் வாழப்­போ­கி­றீர்கள் என எள்ளி நகை­யா­டியோர் பலர். ஆனால் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு மேல் எடுத்துக் கொண்ட உறு­தி­மொழி நிறை­வே­றி­ய­தல்­லவா மிகப் பலம் பொருந்­திய அரபு நாடு­க­ளுக்கு மத்­தியில் இஸ்ரேல் உரு­வா­கி­யது இது கன­வல்ல.
இரண்டாம் உல­கப்­போரின் போது ஜேர்­ம­னியின் ஒரு பகு­தியை ரஷ்யா கைப்­பற்­றி­யது. அந்­தப்­ப­குதி கிழக்கு ஜேர்மன் என்று பெய­ரி­டப்­பட்­டது.
இரண்டும் ஒன்று சேருமா பிரிந்த எம் உற­வு­களை நாம் மீண்டும் சந்­திப்­போமா என்று இரு தரப்­பு­ மக்­களும் பல­ஆண்­டுகள் ஏங்­கித்­த­வித்­தார்கள். ஆனால் ரஷ்­யா­வுடன் ஏற்­பட்ட பேச்­சு­வார்த்­தை­யை­ய­டுத்து 1989ஆம் ஆண்டு கிழக்கு ஜேர்­ம­னியும் மேற்கு ஜேர்­ம­னி­யுடன் இணைந்­தது.
ஜேர்­ம­னியின் இணைப்­புடன் ரஷ்­யா­விலும் மாபெரும் ஜன­நா­ய­கப்­பு­ரட்சி ஏற்­பட்­டது. சோவியத் ரஷ்யா என்ற பெரும் தேசம் பல நாடு­க­ளா­கப்­ பி­ரிந்­தது.
அந்­நா­டுகள் அனைத்தும் இணைந்து ரஷ்­யாவின் தலை­மையில் அமைப்­பொன்றை ஏற்­ப­டுத்­தின. அதே­நே­ரத்தில் ரஷ்­யாவின் ஆளு­கைக்கு உட்­பட்­டி­ருந்த யூகோஸ்­லோ­வியா என்ற நாடும் பிள­வுப்­பட்­டது.
அது ஏழு நாடு­க­ளாகப் பிள­வுப்­பட்ட போது தாமும் ஒரு நாடாக விரும்­பு­வ­தாக கொஸாவோ மக்கள் தெரி­வித்­தனர். இரு­பத்­தைந்து லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட கொஸாவோ, தமிழ் மக்கள் கோரும் உத்­தேச தமி­ழீ­ழத்தின் பரப்ப­ளவைக் கொண்­டது.
அதற்கு பலத்த எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்ட போது அந்த மக்­களால் போராட்டம் நடத்­தப்­பட்­டது. பத்து ஆண்­டு­க­ளுக்கு மேலாக நடை­பெற்ற போராட்­டத்தின் பின் ஐரோப்­பிய ஒன்­றியம் அந்த மக்­களின் கோரிக்­கையை ஏற்றுக் கொண்­டது.
ஆனால் ரஷ்­யாவின் எதிர்ப்பு கார­ண­மாக ஐ.நா. பாது­காப்­புச் ­சபை கோஸாவோ தனி­நா­டாகப் பிரி­வதை ஏற்றுக் கொள்­ள­வில்லை. ஆனால் ஐ.நா. பொதுச்­ ச­பையில் ஐரோப்­பிய ஒன்­றி­யம் ­தனி நாட்டுக் கோரிக்­கையை முன் வைத்­தது.
பெரும்­பா­லான நாடுகள் அதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­தை­ய­டுத்து கொஸாவோ தனி நாடா­கி­யது. தனி­யான மொழியும் கலாசா­ரமும் கொண்ட அந்த மக்கள் தமது சொந்த நாட்டில் இன்று மகிழ்ச்­சி­யுடன் வாழ்­கின்­றனர்.
கிழக்கு தீமோர் தென்­சூடான் ஆகி­யவை புதி­தாக மலர்ந்த நாடு­களை அங்கும் முதலில் ஜன­நா­ய­கப்­போ­ராட்டம் பின்பு ஆயு­தப்­போ­ராட்டம் என தனி­நாடு கோரி போராட்­டங்கள் இடம்­பெற்­றன. இறு­தியில் ஐ.நா. சபை அந்த நாடுகள் விடயத்தில் தலை­யிட்­டது.
கருத்­துக்­க­ணிப்பு நடத்தும் முடிவு எட்­டப்­பட்­டது. ஐ.நா. சமா­தா­னப்­ப­டையின் பாது­காப்பில் கருத்­துக்­க­ணிப்பு இடம்­பெற்­றது. அவற்றில் தனி நாடு தேவை என்றே மக்கள் வாக்­க­ளித்­தனர். அதனால் புதி­தாக இரண்டு நாடுகள் உரு­வா­கின.
ஆனால் கனடாவின் குவிபெத் மாநி­லத்தில் கருத்­துக்­க­ணிப்­பொன்றை நடத்­தி­யது. ஆனால் அதில் சற்று வித்­தி­யா­ச­மான தீர்ப்­பொன்றை மக்கள் வழங்­கி­னார்கள்.
பிரெஞ்சு மொழி பேசும் மாநிலம் அது முழு­மை­யான சுயாட்சி நிர்­வாக கட்­ட­மைப்பு அங்கு உள்­ளது. காவல்­துறை, காணி, கல்வி, வேலை­வாய்ப்பு அதி­காரம் கொண்ட மாநிலம் அது.
ஆனாலும் அங்கு தனி நாடு கோரி அர­சியல் கட்­சிகள் உரு­வா­கின மாநில தேர்­தல்­களில் மக்கள் அந்­தக்­கட்­சி­க­ளுக்கும் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். அதனால் கனடா அரசு குவிபெக் மாநில மக்­களின் கருத்தை அறிய வாக்­கெ­டுப்­பொன்றை நடத்­தி­யது. அதில் பெரும்­பான்­மை­யான மக்கள் தாம் கனடா அர­சுடன் இணைந்­தி­ருக்­கவே விருப்பம் தெரி­வித்­துள்­ளனர்
தனி­நாட்டு கோரிக்­கைக்கு குறைந்­த­ளவு வாக்­கு­களே கிடைத்­துள்­ளன. எனவே அங்கு தனி நாடு கோரிய கட்­சிகள் தற்­போது தமது கொள்­கை­களை மாற்றி அமைத்­துள்­ளன.
ஜன­நா­ய­கத்தையும் மனித உரி­மை­க­ளை யும் மதிக்கும் கனடா போன்ற நாடு­களில் மக்­களின் சுய­நிர்­ணய உரிமை பாது­காக்­கப்­ப­டு­கின்­றன. தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா தமி­ழீழ கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்பு குறித்து பேசி­யுள்ளார்.
இவ்­வாரம் அவர் புதிய பாரதப் பிர­தமர் நரேந்­திர மோடியை புது­டில்­லியில் சந்­தித்துப் பேசி­யுள்ளார். மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த சந்­திப்­பாக அது அமைந்­துள்­ளது. முதலில் தமி­ழக மாநில நலன்­கு­றித்த திட்­டங்­க­ளை­ய­டுத்து இலங்கை பிரச்­சினை தொடர்­பா­கவும் பேசி­யுள்ளார்.
ஏற்­க­னவே சட்ட சபையில் நிறை­வேற்­றப்­பட்ட இரண்டு தீர்­மா­னங்­களை அவர் பார­தப்­ பி­ர­த­ம­ரிடம் முன் வைத்­துள்ளார். ஈழத்தில் இடம்­பெற்ற தமி­ழினப் படு­கொலை குறித்து சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம்.
தமி­ழீழம் தொடர்­பாக கருத்­துக்­ க­ணிப்பை ஐ.நா. நடத்த வேண்டும். ஈழத்­த­மி­ழ­ருடன் புலம்­பெயர் தமி­ழர்­களும் அந்த வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்ள சந்­தர்ப்பம் அளிக்க வேண்டும். இந்­திய அரசு ஐ.நா. பொதுச்­ச­பையில் இது தொடர்பான தீர்­மானம் ஒன்றைக் கொண்­டு­வர வேண்டும் என புதிய பார­தப்­ பி­ர­த­ம­ரிடம் அவர் இந்த வேண்­டு­கோளை விடுத்தார்.
முதல்வர் ஜெய­ல­லிதா இவ்­வி­ட­யத்தில் மிகத்­தீ­வி­ர­மாக இருப்­ப­தை­யிட்டு உல­கத்­த­மி­ழர்கள் மிகுந்த அக்­க­றை­யுடன் நன்றி தெரி­வித்துக் கொள்­கி­றார்கள். காலம் நேரம் அறிந்து காய் நகர்த்­து­வதில் அவர் எப்­போ­துமே வல்­லவர் எனப்பல­ராலும் குறிப்­பி­டப்­ப­டு­பவர்.
அவர் பார­தப்­ பி­ர­த­ம­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­போ­கிறார் என்­ற­செய்தி இலங்கை அரசில் அதிர்­வு­களை ஏற்­ப­டுத்தி இருந்­தது.
அவர் தமி­ழீழ மீனவர் பிரச்­சினை ஈழத்­த­மிழர் பிரச்­சினை தொடர்­பாக கண்­டிப்­பாக பிர­த­ம­ருடன் பேச்­சு­வார்த்தை நடாத்­துவார் என இலங்கை அரசு எதிர்­பார்த்­தது. பல இந்­திய ஊட­கங்கள் இதனை வெளி­யிட்­டி­ருந்­தன. தமி­ழக முதல்வரின் பேச்­சு­வார்த்­தையை திசை­தி­ருப்பும் விதத்தில் இரண்டு நட­வ­டிக்­கைகள் இலங்கை அரசு எடுத்­தி­ருந்­தது.
1. மீனவர் விடு­தலை
2. கூட்­ட­மைப்­பிடம் பரிந்­துரை கேட்டல்
இவ்­விரு நட­வ­டிக்­கை­களும் முதல்­வரின் பேச்­சு­வார்த்­தை­யுடன் சம்­பந்­தப்­பட்­டது. மேலும் குறிப்­பாகச் சொல்­வ­தாக இருந்தால் பேச்­சு­வார்த்­தையை ஊட­றுத்­துச்­செல்லும் முயற்­சி­யா­கவ ஊட­கங்­க­ளினால் கணிக்­கப்­ப­டு­கின்­றன. வெள்ளிக்­கி­ழமை 29 மீன­வர்கள் திடீ­ரென கைது செய்­யப்­பட்டு காவலில் வைக்­கப்­ப­டு­கின்­றனர்.
ஆனால் பேச்­சு­வார்த்­தைக்கு முதல் நாளி­ரவு நல்­லெண்ண அடிப்­ப­டையில் அவர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­வாக அறி­வித்தல் வெளி­யா­னது. மீனவர் கைது செய்­யப்­பட்­டதும் முதல்வர் பார­தப்­பி­ர­த­ம­ருக்கு கடிதம் எழு­தினார். அவர்­களை விடு­விக்க உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என அவர் பிர­த­மரை கேட்­டுக்­கொண்டார்.
அது மாத்­தி­ர­மல்ல இலங்கை கடற்­ப­டை­யி­னரின் அத்­து­மீ­றல்­க­ளுக்கு ஒரு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இரண்­டா­வது விட­ய­மாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் பங்­கு­பற்ற வேண்டும் என்ற விடயம் எடுத்­தா­ளப்­பட்­டது. அமைச்சர் சிறி­பா­லடீ சில்வா கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு வேண்­டுகோள் ஒன்றை விடுத்தார். நீங்கள் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வர­விட்­டாலும் தீர்­வுத்­திட்­டத்­திற்­கான உங்கள் பரிந்­து­ரை­களை அனுப்­பி­வை­யுங்கள் என்­ப­துதான் அவரின் வேண்­டுகோள்.
முதல்­வரும் பார­தப்­பி­ர­த­மரும் பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்கு முதல்நாள் இதனை அமைச்சர் வெளி­யிட்டார். ஆனால் கூட்­ட­மைப்பு உட­ன­டி­யா­கவே அதற்கு பதி­ல­ளித்­து­விட்­டது. கூட்­ட­மைப்பு பங்­கு­பற்­றாமல் அதன் பரிந்­து­ரை­களை நீங்கள் எப்­படி எதிர்­பார்க்­கலாம் என அந்­தப்­ப­திலில் குறிப்­பி­டப்­பட்­டது.
இலங்கை அரசு எதிர்­பார்த்­த­தைப்போல் இவ்­விரு காய் நகர்த்­தல்­களும் எவ்­வித பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­த­வில்லை. மீனவர் பிரச்­சினை குறித்தும் ஈழத்­த­மிழர் தொடர்­பா­கவும் இரு­த­லை­வர்­களும் சற்று ஆழ­மா­கவே உரையாடியுள்ளனர்.
இதனை இந்­திய ஊட­கங்கள் மாத்­தி­ர­மல்ல சர்­வ­தேச ஊட­கங்­களும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா ஈழத்­த­மிழர் விட­யத்தில் மிகத்­தெ­ளி­வாக இருக்­கிறார் என அல் ஜஸிரா தொலைக்­காட்­சியில் சுட்டிக்காட்டியிருந்­தது.
13ஆம் அர­சியல் அமைப்பு திருத்­தச்­சட்டம் தொடர்­பா­கவோ அல்­லது அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பா­கவோ தமி­ழக முதல்வர் எதுவும் குறிப்­பி­ட­வில்லை. நேர­டி­யாக அதே நேரத்தில் தூர நோக்குச் சிந்­த­னை­யுடன் தனித்­த­மி­ழீழ கருத்துக்கணிப்பு வாக்­கெ­டுப்பு கோரிக்­கையை முன்­வைத்­துள்ளார்.
இருப்­பினும் தொடர்ச்­சி­யாக ஈழத்தில் தமி­ழர்கள் பெரும் அவ­லங்­களைச் சந்­தித்­து­வரும் நிலையில் 38 ஆண்­டு­க­ளுக்கு முன்பு எடுக்­கப்­பட்ட தமி­ழீழம் என்ற முடிவு உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக இந்­திய ஊட­க­மொன்று குறிப்பிட்டுள்ளது.
தமி­ழீழ கருத்­துக்­க­ணிப்பு வாக்­கெ­டுப்பு என்­பது ஜன­நா­யக விதி­மு­றை­க­ளுக்­குட்­பட்­டது. அதனை ஐ.நா நடாத்­து­வது என்­பது சர்­வ­தே­சமும் மக்­களின் தீர்ப்பை பெற்­றுக்­கொள்ளும் சந்­தர்ப்­ப­மாக அமை­கின்­றது.

தமி­ழக முதல்­வரின் ஆலோ­ச­னையை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் திரு. சுரேஷ் பிரே­ம­சந்­திரன் வர­வேற்­றுள்ளார். போர் முடிந்­ததன் பின் அர­சுடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி தீர்­வுத்­திட்டம் ஒன்றைக் கொண்டு வர நாம் முயற்­சித்தோம்.
2011ஆம் ஆண்டு இடைக்­கால தீர்­வுத்­திட்ட யோசனை ஒன்­றையும் நாம் சமர்ப்­பித்­தி­ருந்தோம். ஆனால் அரசு அது தொடர்­பாக எவ்­வித மேல­திக நட­வ­டிக்­கை­யிலும் ஆர்வம் காட்­ட­வில்லை. சர்­வ­தே­சத்­திற்கும் அது பல வாக்குறுதிகளை வழங்­கி­யுள்­ளது. ஆனால் இது­வரை அவை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. தொடர்ச்­சி­யாக தமி­ழர்கள் பெரும் அவ­திக்­குள்­ளேயே வாழ்ந்து வரு­கின்­றார்கள். எனவே அவர்­க­ளிடம்  தமி­ழீழ கருத்துக் கணிப்­பொன்றை ஐ.நா நடாத்தும் யோச­னையை நாமும் வர­வேற்­கின்றோம் என அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.
புலம்­பெயர் தமிழ்­மக்­களும் தொடர்ச்­சி­யாக இக்­க­ருத்­துக்­க­ணிப்பு இடம்­பெற வேண்டும் என்­பதில் ஆர்­வ­மாக உள்­ளார்கள். ஐ.நா பணி­ம­னைக்கும் ஐ.நா பொதுச்­செ­ய­ல­ருக்கும் தாய­கத்­த­மிழர் பிரச்­சி­னைக்கு தமி­ழீ­ழமே தீர்­வாக அமைய முடியும் எனக்­கு­றிப்­பிட்டு வரு­கின்­றனர்.
அதே­நே­ரத்தில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொலை குறித்து சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம் என்­ப­தையும் அவர்கள் சுட்­டிக்­காட்டி வரு­கின்­றனர்.
ஐ.நாம­னித உரிமை ஆணை­யாளர் திரு­மதி நவ­நீ­தம்­பிள்ளை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்­துடன் ஓய்வு பெற இருக்­கிறார். அவரின் பத­விக்­காலம் நீடிக்­கப்­ப­டலாம் என முன்பு எதிர்வு கூறப்­பட்­டது. ஆனால் இப்­போது அவர் ஓய்வு பெறு­வது உறு­தி­யாகி விட்­டது. அவரின் இடத்­திற்கு புதிய ஆணை­யா­ள­ராக சட்­ட­வாளர் திரு. தருஷ்மன் நிய­மிக்­கப்­படும் சாத்­தி­யக்­கூ­றுகள் அதி­க­மா­க­வே­கா­ணப்­ப­டு­கின்­றன.
இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் தொடர்­பாக ஐ.நா பொதுச்­செ­ய­லாளர் நிபுணர் குழு­வொன்றை நிய­மித்­தி­ருந்தார். அந்­தக்­கு­ழு­வுக்கு திரு. தருஷ்மன் தலை­வ­ராகப் பணி­பு­ரிந்தார்.
அந்­தக்­கு­ழுவின் அறிக்­கையில் இலங்கை அர­சுக்கு எதி­ரான போர்க்­குற்­றங்கள் முதல் தட­வை­யாக வெளிப்­பட்­டது. இங்கு குறிப்­பி­டத்­தக்­கது எனவே அவர் ஆணை­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டால் அது இலங்கை அர­சுக்கு சாத­க­மா­ன­தல்ல என்றும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. ஐ.நா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை அர­சுக்கு எதி­ராக தீர்­மானம் தற்­போது செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது.
அதன் விசா­ர­ணை­களை நடாத்த முன்னாள் ஐ.நா பொதுச்­செ­ய­லாளர் திரு. கோபி அனான் நிய­மனம் பெறுவார் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவர் அங்கு வரு­வ­தற்கு முன்பே இலங்கை அர­சி­லி­ருந்து அவ­ருக்கு எதி­ரான குரல்கள் எழ ஆரம்­பித்­துள்­ளன.
அவர் நாட்­டினுள் வர நுழைவு அனு­மதி வழங்­கப்­பட மாட்­டா­தென அரசு தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளத. ஆனாலும் அவர் தொடர்­பாக அரசின் உத்­தி­யோ­கப்­பூர்­வ­மான தக­வல்கள் இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. ஏனெனில் தீர்­மா­னத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்க மாட்டோம் என இலங்கை அரசு உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக ஜெனிவா ஐ.நா பனி­ம­னைக்கு அறி­விக்­க­வில்லை. அவ்­வா­றி­ருக்க கோபி அனானை வர வேண்டாம் என்று இலங்கை அர­சினால் குறிப்­பிட முடி­யாது என்றே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
- வீ.ஆர்.வரதராஜா
ஊடகவியலாளர் – ஜேர்மனி
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger