வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தில் புதையுண்டு கிடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரத்தை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
சப் ஆற்றின் வடக்கு கரை பகுதியில் சட்டு காலா என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள ஒரு பாறைக்கு அடியில் தரைமட்டத்தில் இருந்து 32 அடி ஆழத்தில் புதையுண்டு கிடந்த முன்னர் அபு என்று அழைக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில்தான் மத்திய கிழக்கு நாடுகளில் பயிர் வேளாண்மை தோன்றியதாகவும், அசாரியன் பேரரசின் கீழ் சுமார் 2900 மற்றும் 3300 ஆண்டுகளுக்கு இடையில் இந்த நகரில் மக்கள் வசித்திருக்க கூடும் எனவும் தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.
எடிமா என்பவரின் மகனான பவுரியின் அரண்மனை இங்கு இருந்ததற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.
Post a Comment