இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் மதமாற்றத்தைத் தடைசெய்யுமாறு கோரியும், இந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, புதிய இந்தியப் பிரதமர் உதவ வேண்டும் எனக் கோரியும் ஊர்வலமொன்று
நடத்தப்பட்டிருக்கின்றது.இலங்கை இந்திய இந்துமக்கள் நட்புறவுக் கழகமும், இந்து சமயப் பேரவையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்ததாக அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவராகிய யோகராஜா துஸ்யந்தன் கூறினார்.
நல்லூர் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் பலாலி வீதியில் உள்ள இந்துசமயப் பேரவை வளாக ஆலயத்தில் சென்று முடிவடைந்தது. அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்லாசி வேண்டியும், வாழ்த்து தெரிவித்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்காகவே, இந்த ஊர்வலமும், நல்லாசி வேண்டுவதற்கான வழிபாடும் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment