மங்கள சமரவீரவை கைது செய்வதற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு


புலனாய்வுப் பிரிவினரின் இனவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய மங்கள சமரவீரவை கைது செய்வதற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் காரணமாக அண்மைக்காலமாக நாட்டில் இனவாத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் புலனாய்வுப் பிரிவினரே இச்செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வுப் பிரிவு தொடர்பான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.

பொதுபல சேனா அமைப்பினருடன் அரசாங்கத்துக்குள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ள நிலையில், சிறுபான்மையின மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களும் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அரசாங்கம் தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கடும் சினமடைந்துள்ளார்.

நேற்று இரவு அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சந்திரா வாகிஷ்ட, சட்டமா அதிபர் ஆகியோரை அழைத்து திட்டித்தீர்த்துள்ளார்.

மங்கள சமரவீரவை உடனடியாக தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யுமாறு அவர் சீறியுள்ளார்.

தற்போதைய நிலையில் அரசமைப்புச் சட்டத்தின் தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் தொடர்பான 1955/32 பிரிவின் கீழ் மங்கள சமரவீரவைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனை தற்போது பாதுகாப்பு அமைச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger