காந்தி மண்­ட­பத்தை திறந்து வைப்­ப­தற்கு, இந்­திய பிர­தமர் இலங்கை வரு­கிறார்….!!

 

மாத்­த­ளையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் காந்தி மண்­ட­பத்தின் திறப்பு விழாவில் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதத்தில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பிர­தம அதி­தி­யாக கலந்­து­ கொள்வார் என்று இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. அதற்கு முன்னர் இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு நிலை­மை­களை ஆராய்வார் என்றும் தெரி­விக்­கப்­படுகின்றது.
இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி விரைவில் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டு ­வ­ரு­கின்ற நிலையில் அவர் காந்தி மண்­ட­பத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்­கேற்­கவே இலங்­கைக்கு விஜயம் செய்வார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
மாத்­த­ளையில் காந்தி மண்­டபம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது. எதிர்­வரும் ஒக்­டோபர் மாதத்­துக்கு முன்னர் அதனை நிர்­மா­ணித்து முடிப்­ப­தற்கு இந்­தியா எதிர்­பார்க்­கின்­றது.
அந்­த­வ­கையில் ஒக்­டோபர் மாதம் இரண்டாம் திக­தி­ய­ளவில் காந்தி மண்­ட­பத்தை திறந்து வைப்­ப­தற்கு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என்றும் அதற்கு பிர­தம அதி­தி­யாக இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பங்­கேற்­கலாம் என்றும் இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் குறிப்­பிட்­டன.
இந்­நி­லையில் அதற்கு முன்னர் இலங்­கையின் நிலை­மை­களை ஆராய இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை விஜயம் செய்­ய­வுள்ளார் என்­பதும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் பத­வி­யேற்பு விழா­வுக்கு சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, அவரை இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ளு­மாறு உத்­தி­யோ­க­பூர்வ அழைப்பு விடுத்­தி­ருந்தார்.
இதே­வேளை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த 2012 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger