காஸா முனையில் இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும், இந்த போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
காஸா பிரதேசத்திலிருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக திருப்பியழைக்கப்பட வேண்டும் என பலஸ்தீன் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு மேலும் நிபந்தனையிட்டுள்ளது.
இரு தரப்பினரிடையே நிரந்தர யுத்த நிறுத்தத்துக்கான முயற்சிகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றன. இதன்போதே ஹமாஸ் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
இதேவேளை, மூன்று நாள் யுத்த நிறுத்தம் இன்று முடிந்ததை அடுத்து, காஸாவை நோக்கி இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை நடாத்தியுள்ளதாகவும் இதன் சேத விபரங்கள் இது வரை அறியப்படவில்லையெனவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
Post a Comment