10வருடங்களாக இலங்கை சிறுவர்களை துஷ்­பி­ர­யோகம் செய்து வந்த பிரான்ஸ் நாட்டவர் இலங்­கைக்கு வந்­த பிரான்ஸின் விசேட பொலிஸ் குழு­வினால் அம்­ப­ல­மான கதை..



கடந்த மாதம் ஆரம்­பத்தில் பிரான்ஸின் விசேட பொலிஸ் குழு­வொன்று இலங்­கைக்கு வந்­தி­ருந்­தது. பிரான்ஸின் பொலிஸ் ஆணை­யாளர் ஒரு­வரும் இரு பொலிஸ் பரி­சோ­த­கர்­களும் அடங்­கிய அந்த குழு சுமார் இரு வாரங்­க­ளுக்கு மேலாக இலங்­கையில் தங்­கி­யி­ருந்து மிக முக்­கி­ய­மான ஒரு குற்­ற­வாளி தொடர்­பி­லான சாட்­சி­யங்­களை சேக­ரிக்­க­லா­னது.

இலங்கை வந்த அந்த பொலிஸ் குழு முதலில் சந்­தித்­தது பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்க கோனை­யாகும். தாம் இலங்­கைக்கு வரு­வ­தற்­கான நோக்­கத்­தையும் திட்­ட­த்தையும் இலங்­கையின் வெளி விவ­கார அமைச்சின் ஊடாக சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கும் பொலிஸ் திணைக்­க­ளத்­துக்கும் அந்த பொலிஸ் குழு அறி­வித்­தி­ருந்­ததாலும் சம்­பி­ர­தாய பூர்­வ­மாக பொலிஸ் மா அதி­பரை சந்­தித்து தாம் வந்த நோக்­கத்தை அந்த பொலிஸ் குழு விளக்கத்தவறவில்லை.
பிரான்ஸில் கடந்த 2012 ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்ட பிர­ப­ல­மான சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்­ற­வாளி ஒருவர் தொடர்பில் சாட்­சி­யங்­களை தேடியே தாம் இலங்கை வந்­தி­ருப்­பதை பொலிஸ் மா அதி­ப­ரிடம் அந்த பிரான்ஸ் பொலிஸ் குழு விளக்­கி­யது.
இதனை அடுத்து பிரான்ஸ் பொலிஸ் குழுவை பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன் சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­ச­பையின் தலைவர் திரு­மதி அனோமா திஸாநாயக்காவிடம் அனுப்பி வைக்­கின்றார்.
அங்கு சென்ற அந்த பிரான்ஸ் பொலிஸ் குழு திரு­மதி அனோமா திஸா­நா­யக்­கவை சந்­தித்து ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொண்டு சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதில் அனு­பவம் வாய்ந்த பொலிஸ் பரி­சோ­தகர் பந்து ஜீவ போபிட்­டி­கொட தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­ன­ருடன் இணைந்து விசா­ர­ணை­களை தொடர்ந்து சாட்­சி­யங்­களை திரட்­ட­லா­னது.
பிரான்ஸின் பொலிஸ் குழு­வொன்று இவ்­வாறு எமது நாட்­டுக்கு வந்து குற்­ற­வாளி ஒருவர் தொடர்பில் சாட்­சி­யங்­களை திரட்­டு­வது இதுவே முதல் முறை­யாகும். எனினும் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் ஒன்று தொடர்பில் வெளிநாட்டு பொலிஸ் குழு­வொன்று இலங்­கைக்கு வந்து விசா­ரணை செய்யும் இரண்­டா­வது சந்­தர்ப்­ப­மா­கவே இதனை நாம் கண்­கின்றோம்.
இதற்கு முன்னர் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரித்­தா­னிய தொலைக்­காட்சி நடிகர் ஒருவர் தொடர்­பி­லான சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்டை அடுத்து சாட்­சி­யங்­களை தேடி ஸ்கொட்­லன்ட்யாட் பொலிஸார் இங்கு வருகை தந்­தி­ருந்­தமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. அது தொடர்பில் விரி­வாக பார்க்க முன்னர் நாம் இப்­போது பிரான்ஸ் சம்­பவம் குறித்து நோக்­கலாம்.
அலெக்ஸ் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) ஒரு செல்­வந்த வர்த்­தகர். தற்­போது 52 வய­தாகும் இந்த பிரஞ்சுப் பிரஜை கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இலங்­கைக்கு அடிக்­கடி சுற்­றுலா விஸா பெற்று இங்கு வந்து சென்ற ஒரு சுற்­றுலா பயணி. இறு­தி­யாக இவர் இலங்­கைக்கு வந்து சென்­றமை கடந்த 2012 ஆம் ஆண்­டாகும்.
இந் நிலையில் அலெக்ஸ் தொடர்பில் பிரான்ஸ் பொலி­ஸா­ருக்கு சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்­டொன்று கடந்த 2012 ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்­றுள்­ளது. இது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த அந் நாட்டு பொலிஸார் விசா­ர­ணை­களின் ஒரு அங்­க­மாக அலெக்ஸின் வீட்டை சுற்­றி­வ­ளைத்து தேடுதல் மேற்­கொள்­வது என தீர்­மா­னித்­தனர்.
இந் நிலையில் அலெக்ஸ் இறு­தி­யாக இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டு­விட்டு பிரான்ஸ் திரும்­பி­யி­ருந்த சிறிது நாட்­க­ளுக்குள் அவரின் வீடு திட்­ட­மிட்ட படி பிரான்ஸ் பொலி­ஸாரால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டது. அதா­வது பிரான்ஸ் பிரஜை ஒருவர் வழங்­கிய முறைப்­பாட்டின் ஓர் அங்­க­மாக இந்த சுற்­றி­வ­ளைப்பு இடம்­பெற்­றது என்று கூட கூறலாம்.
இதன் போது வீட்டை அதி­ர­டி­யாக சோதனை செய்த பொலிஸார் அலெக்ஸின் மடிக்­க­ணி­னி­யையும் சோத­னை­யி­டத்­த­வ­ற­வில்லை. அலெக்ஸின் மடிக்­க­ணி­னியை சோதனை செய்த போது பொலி­ஸாரின் அனு­மா­னத்தை மிஞ்­சிய, அலெக்ஸின் குற்­றச்­சாட்­டுக்­களை வலு­வூட்­டக்­கூ­டிய தட­யங்கள் பிரான்ஸ் பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்­ளன.
தெளி­வாக சொல்­வ­தென்றால் இலங்கை சிறு­வர்­களை அதுவும் ஆண் சிறு­வர்­களை பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தும் புகைப்­ப­டங்­களும் காணொ­ளி­க­ளுமே அந்த தட­யங்கள். காணொ­ளிகள் அனைத்தும் ஓரினச் சேர்க்­கை­யையை அதுவும் சிறு­வர்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக எடுக்­கப்­பட்ட தனி நீலப் படங்­க­ளாக வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தன.
திரு­மதி அனோமா திஸாநாயக்க

இது பிரான்ஸ் பொலி­ஸாரை அதிர்ச்­சியின் உச்­சத்­துக்கே கொண்டு சென்­றுள்­ளது.
உட­ன­டி­யாக செயற்­பட்ட பொலிஸார் அலெக்ஸை கைது செய்­தனர். சிறுவர்­களை பாலியல் ரீதி­யாக கொடுமை படுத்­தி­யமை, துஷ்பி­ர­யோகம் செய்­தமை, நீலப்­படம் தயா­ரித்­தமை உள்­ளிட்ட பல குற்­றச்­சாட்­டுக்­களை பிரான்ஸ் பொலிஸார் அலெக்ஸ் மீது சுமத்தி நீதி­மன்றில் ஆஜர் படுத்­தினர்.
இந் நிலையில் பிரான்ஸ் நீதி­மன்றில் தொடரும் இந்த வழக்­கிற்கு மேலும் வலு சேர்க்கும் வித­மாக தட­யங்­க­ளாக கிடைத்த வீடியோ மற்றும் புகைப்­ப­டங்­களின் சாட்­சி­யங்­களை தேடியே பிரான்ஸ் பொலிஸ் குழு கடந்த மாதம் இலங்கை வந்­தது. அந் நாட்டு நீதி­மன்றின் அனு­ம­தி­யுடன் இங்­கு­வந்த அந்த பொலிஸ் குழு சுமார் இரு­வா­ரங்­க­ளுக்கு மேலாக இங்கு தங்­கி­யி­ருந்து விசா­ரணை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.
இந் நிலையில் பல விட­யங்கள் தற்­போது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ள­துடன் பல சாட்­சி­யங்­க­ளுடன் பிரான்ஸ் பொலி­ஸாரும் நாடு திரும்­பி­யுள்­ளனர் எனலாம்.
சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யுடன் இணந்­த­தாக செயற்­படும் விஷேட பொலிஸ் குழு­வி­ன­ருடன் சேர்ந்து தக­வல்­களைப் பரி­மாற்­றிக்­கொண்டு சாட்­சி­யங்­களை தேடிய போது சுமார் 40 சிறு­வர்கள் வரையில் இந்த பிரான்ஸ் பிர­ஜையால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்ளனர். என்ற உண்மை முதலில் புலப்­பட்­டது. அது பிரான்ஸ் பொலிஸார் அவர்­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றிய இலங்கை பொலிஸ் குழு­வி­ன­ருக்கு வழங்­கிய புகைப்­ப­டங்கள் மற்றும் காணொ­ளி­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­தது.
அத்­துடன் 2002 ஆம் ஆண்டு முதல் இந்த பிரஞ்சுப் பிரஜை இலங்­கைக்கு சுற்­றுலா வந்­தி­ருந்­தாலும் அவரின் நோக்கம் சிறு­வர்­களை ஏமாற்றி பாலியல் ரீதி­யாக இன்பம் கண்டு அது தொடர்­பான காணொ­ளி­களை தயா­ரிப்­பதே என்­பதை பொலிஸார் அறிந்து கொள்ள வெகு நேரம் தேவைப்­ப­ட­வில்லை.
இதனை அடுத்து மிக விரை­வா­கவும் விவே­க­மா­கவும் செயற்­பட்ட பொலிஸார் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் தலைவர் அனோமா திஸா­நா­யக்­கவின் வழி­காட்­டல்­க­ளுக்கு அமைய துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்ள சிறு­வர்கள் எந்த பிர­தே­சங்­களை சேர்ந்­த­வர்கள் என்­பதை தேடினர். இதன் விளை­வாக அந்த சிறு­வர்கள் ரத்­கம, ஹிக்­க­டுவை, நீர்­கொ­ழும்பு மற்றும் அனு­ரா­த­புரம் ஆகிய பகு­தி­க­ளுக்கே இந்த பிரான்ஸ்­பி­ரஜை அடிக்­கடி சென்று வந்­துள்­ள­மையை பொலிஸார் கண்­டு­பி­டித்­தனர்.
இதனால் குறித்த பிர­தே­சங்­களை சேர்ந்­த­வர்­களும் அதனை அண்­டிய பகு­தி­களைச் சேர்ந்­த­வர்­க­ளுமே பெரும்­பாலும் இந்த அலெக்ஸ் என்ற நபரால் துஷ்­பி­ர­யோகத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும் என்ற அனு­மா­னத்தில் விசா­ர­ணைகள் தொடர்ந்­தன.
அதன்­படி மேல­திக விசா­ர­ணை­களை பிரான்ஸ் பொலிஸ் குழு­வுடன் இணைந்து இலங்கை பொலிஸார் ரத்­கம பகு­தி­யி­லி­ருந்து ஆரம்­பித்­தனர். இதன் போது பிரான்ஸ் பிர­ஜை­யான அலெக்­ஸி­ட­மி­ருந்து தாம் விசா­ர­ணை­களில் பெற்ற தக­வல்­களை இலங்கைப் பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யி­ருந்­தனர்.
அதில் மிக முக்­கி­ய­மான தகவல் ஒன்று இருந்­தது. அது தான் அலெக்ஸ் இங்கு வந்த போது சந்­தித்த நபர்­களின் பட்­டியல்.
அந்த வகையில் 2002 ஆம் ஆண்டு அலெக்ஸ் இலங்கை வந்­தது முதல் பொலிஸார் சந்­தித்­த­வர்கள் தொடர்பில் பொலி­ஸாரின் கவனம் திரும்­பி­யது. இதன் போது 2002 ஆம் ஆண்டு அலெக்ஸ் சிறு­வர்­க­ளுக்கு உத­வு­பவர் போன்றே நாட்டில் சுற்­றித்­தி­ரிந்­துள்­ள­மையை பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.
அத்­துடன் சிறு­வர்கள் மீது அதீத காம வெறி பிடித்­தி­ருந்த அலெக்ஸ் டொபி, சொக்­லட்­டுக்கள் உள்­ளிட்ட வெளி நாட்டு இனிப்­புக்­களை வழங்­கியே சிறு­வர்­களை தமது காம­வ­லையில் வீழ்த்­து­வதும் பொலி­ஸா­ருக்கு புல­னா­னது. அத்துடன் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு பின்னர் அவர்­களின் கைகளில் 2000 முதல் சில ஆயிரம் ரூபா நோட்­டுக்­களை திணித்து அதனை சரி­கண்­டுள்­ளதும் பொலி­ஸாரால் அறிய முடி­யு­மான கார­ணி­யாக இருந்­தது.
இந்த விட­யங்கள் அனைத்­தையும் பிரான்ஸ் பொலி­ஸாரின் உத­வி­யு­ட­னேயே இலங்கை பொலிஸ் குழு உறு­திப்­ப­டுத்­திக்­கொண்­டது.
இதனை தொடர்ந்தே 2002 ஆம் ஆண்டு அலெகஸுக்கு சுற்­றுலா வழி­காட்­டி­யாக செயற்­பட்ட இலங்­கையர் தொடர்பில் பொலி­ஸாரின் அவ­தானம் திரும்­பி­யது. உட­ன­டி­யாக செயற்­பட்ட பொலிஸார் அந்த நபரை கைது செய்­தனர். பிரான்ஸ் பொலிஸார் வழங்­கிய தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு விசா­ரணை செய்­ததில் அந்த பிரஞ்சுப் பிர­ஜைக்கு சிறுவர்­களை விநியோகம் செய்­த­தாக கூறப்­படும் நபர் தொடர்­பான தக­வல்கள் வெளி­யா­னது.
அதன் அடிப்­ப­டையில் அவ­ரையும் பொலிஸார் கைது செய்­தனர். கைது செய்­யப்­பட்ட இவ்­விரு இலங்­கை­யர்­களும் 25, 35 வய­து­களை உடை­ய­வர்கள். தற்­போது இவ்­வி­ரு­வரும் நீதி­மன்ற கட்­ட­ளையின் பிர­காரம் விளக்­க­ம­றி­யளில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் ஊடக ஒருங்­கி­ணைப்பு அதி­கா­ரி­யான எதி­ரி­வீர குண­சே­கர குறிப்­பி­டு­கின்றார்.
அவரின் தக­வல்­களின் படி அலெக்ஸால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்ட 40 இற்கும் அதி­க­மான சிறுவர்­களில் பலர் தற்­போது வளர்ந்து பெரி­ய­வர்கள் ஆகி­யுள்­ளனர். இந் நிலையில் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளான 10 சிறு­வர்­களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.
பொலி­ஸாரின் மேல­திக விசா­ர­ணை­களில் சிறு­வர்­களை விநியோகம் செய்து வந்த இவ்­வி­ரு­வ­ருக்கும் அலெக்ஸ் பல்­வேறு உத­வி­களை செய்­துள்­ளமை கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு­வ­ருக்கு போக்­கு­வ­ரத்தின் நிமித்தம் வாகனம் ஒன்றை கொள்­வ­னவு செய்­யவும் இன்­னொ­ரு­வ­ருக்கு தொலை தொடர்பு நிலையம் ஒன்­றை, அமைக்­கவும் இந்த பிரான்ஸ் நாட்­டவர் பண உத­வி­களை செய்­துள்­ள­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.
இதனை விட சுற்­றுலா வழி­காட்­டி­யாக செயற்­பட்ட நபர்ப் 35 வயதை அடைந்­துள்ள போதும் இது­வரை திரு­ம­ண­மா­கா­தவர். பெரும் பாலும் இவ­ரு­டைய வீட்­டி­லேயே அலெக்ஸின் காமக் கூத்­துக்கள் அரங்­கே­றி­யுள்­ளன.
இந் நிலை­யி­லேயே பிரான்ஸ் பொலிஸ் குழு சிறு­வர்கள் அனை­வ­ரையும் கண்­டு­பி­டிக்க முயன்ற போதும் அதில் பலரின் வாக்கு மூலங்­க­ளுடன் அந் நாட்டின் நீதி­மன்ரில் அலெக்­ஸுக்கு எதி­ரான சாட்­சி­யங்­களை சமர்­பிக்க விரைந்துள்ளனர். இத­னூ­டாக அலெக்­ஸுக்கு மிக உயர்ந்த பட்ச தண்­ட­னையை பெற்­றுக்­கொ­டுக்க பிரான்ஸ் பொலிஸார் எதிர்­பார்க்­கின்­றனர்.
இத­னி­டையே இவ்­வாறு வெளி நாட்டு பொலிஸ் குழு­வொன்று இலங்கை வரு­வது இரண்­டா­வது தடவை என மேலே குறிப்­பிட்­டி­ருந்தோம். ஆம் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரித்­தா­னிய தொலைக்­காட்சி நடி­க­ரான கெலீ மத்­தியூ என்­பவர் மீது சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தமை ஞாபகம் இருக்கும்.
சிறு­வ­ர்களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்துக்கு உள்­ளாக்­கினார் என்ற சந்­தே­கத்தின் பேரில் பிர­பல பொப் இசை பாடகர் ஜொனதன் கிங் என்­ப­வரை விசா­ரணை செய்­த­போதே கெலீ மெத்­தியூ தொடர்­பான விப­ரங்கள் அம்­ப­ல­மா­ன­தாக கூறப்­பட்­டது. இந் நிலையில் விசா­ர­ணை­களை தொடர்ந்த அந் நாட்டு பொலிஸார் கெலீ மெத்­தி­யூ­வினால் சிறுவர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­ன­மை­யா­னது இலங்­கை­யி­லேயே இடம்­பெற்றுள்­ள­தாக குறிப்­பிட்டு அப்­போது இங்கு வந்­தி­ருந்­தனர். அப்­போது இலங்கை வந்த ஸ்கொடலண்யார்ட் பொலி­ஸா­ருக்கு அது தொடர்பில் பல விட­யங்கள் மற்றும் சாட்­சி­யங்கள் கிடைந்­தி­ருந்­த­தா­கவும் அறிய முடி­கின்­றது.
குறித்த குற்­றச்­சாட்­டுகளின் கீழ் முதலில் கெலீ மெத்­தியூ கைது செய்­யப்­பட்­ட­போதும் சாட்­சிகள் இன்­மையால் விடு­த­லை­யானார்.இதனை தொடர்ந்தே 2003 ஜன­வரி மாதம் ஸ்கொட்லன்யார்ட் பொலிஸார் இலங்கை வந்து விசாரணை­களை முன்­னெ­டுத்துள்ளானர் .
இதனை அடுத்து நீர் கொழும்பில் உள்ள மெத்­தி­யூ­விற்கு சொந்­த­மா­னது எனக் கூறப்­படும் சொகுசு வீடொன்றை சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து சுற்­றி­வ­ளைத்த ஸ்கொட்­லன்ட்யார்ட் பொலிஸார் அந்த வீட்டில் சல்­லடை போட்டு தேடி சாட்­சி­யங்­களை திரட்­டி­யி­ருந்­தனர்.
அப்­போது சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் தலைவ­ராக பேரா­சி­ரியர் மஹேன்ந்­திர சில்வா கட­மை­யாற்­றி­யி­ருந்தார். இந் நிலையில் பல சாட்­சி­யங்­க­ளுடன் இலங்­கை­யி­லி­ருந்து திரும்­பிய ஸ்கொட்­லான்ட்யார்ட் பொலிஸார் கெலீ மெத்­தி­யூ­விற்கு சிறு­வர்­களை விநியோ­கித்த நபர்­க­ளையும் கைது செய்ய உத­வி­யதன் பின்­ன­ரேயே திரும்­பி­யி­ருந்­தனர்.
இது போன்ற சிறுவர் பாலியல் விவ­கா­ரங்­களில் நாட்டம் கொண்ட ஒரு­வ­கை­யான மனப்­பாங்கு கொண்ட சுற்­றுலாப் பயணிகள் இன்னும் இலங்­கைக்கு வந்து செல்­கின்­றனர். பல நாடுகள் ஓரினச் சேர்க்­கைக்கும் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ள நிலையில் அவ்­வா­றான நாட்­ட­முள்­ள­வர்கள் ஓரினச் சேர்க்கை என்ற போர்­வையில் சிறுவர்­களை துஷ்­பி­ர­யோகம் செய்ய முனை­கின்­றனர்.
இந் நிலையில் இவ்­வா­றான மறை­முக காமு­கர்­களின் பிடி­யி­லி­ருந்து எமது நாட்டின் சிறு­வர்­களை மீட்­க­வேண்­டிய பாரிய கடப்­பாடு சுற்­றுலா துறை அபி­வி­ருத்­தி­ய­டைந்­துள்ள நிலையில் எமது சமூ­கத்­த­வர்­க­ளிடம் உள்­ளது. பிடி­பட்­ட­வர்கள் ஒரே ஒரு அலெக்ஸ் ஆகவும் ஒரே ஒரு மத்­தி­யூ­வா­கவும் இருக்­கலாம். பிடி­ப­டாமல் பல ஆசா­மிகள் இவ்­வாறு நட­மா­டிக்­கொண்டும் இருக்­கலாம். அவர்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­ப­டு­வது மிக அவ­சி­ய­மாகும்.
இலங்­கையை பொறுத்­த­வரை ஒரு நாளைக்கு 5 முதல் 6 சிறு­வர்கள் வரை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன தெரி­விக்­கின்றார். இதன்­படி வரு­டத்­துக்கு 2000 சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­வ­தாக குறிப்­பிடும் அவர் அவர்­களில் 90 வீத­மானோர் 16 வய­துக்கு கீழ் பட்டோர் என குறிப்­பி­டு­கின்றார்.
அதுவும் அவர்­களில் பெரும்­பான்­மை­யானோர் உற­வி­னர்­க­ளா­லேயே துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வ­தா­கவும் பெரும்­பாலும் அவற்­றுக்கு சிறு­வர்­களின் அப்­பா­வித்­தனம் சம்­ம­த­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக்வும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
பொலிஸாரின் தகவல்களின் பிரகாரம் 2011 ஆம் ஆண்டு 1463 சிறுவர்கள் இலங்கையில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தொகையானது 2012 ஆகும் போது 1759 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அது 2000 வரை அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் பாலியல் ரீதியாக சிறுவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்களின் பட்டியலே.
பொதுவாக சிறுவர்களுக்கு எதிரான அனைத்து துஷ்பிரயோகங்களையும் எடுத்து நோக்கும் போது இந்த தொகையானது 2012 ஆம் ஆண்டில் 5000 யும் தாண்டுவதாக புள்ளி விபரங்கள் விபரிக்கின்றன. இந் நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் உறுதியான திட்டம் ஒன்று இலங்கைக்கு அவசியமாகின்றது. நாடளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து பொலிஸார் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் நேரடி கட்டுப்பாட்டில் சுமார் 41 சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பான விஷேட பொலிஸ் பிரிவின் காரியாலயங்கள் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அஜித் ரோஹன
சிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்­தினை முற்­றாக கட்­டுப்­ப­டுத்த சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையில் உள்ள பொலிஸ் பிரிவை போன்றே ஏனைய பிராந்­திய பொலிஸ் நிலை­யங்­களில் உள்ள சிறுவர் மற்றும் மகளிர் பிரி­வூ­டாக விஷேட செயற்­றிட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றிப்­பிடும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன குறிப்­பாக பாட­சாலை மாண­வர்கள் கய­வர்­களின் பிடியில் சிக்கிக் கொள்­வதை தவிர்க்கும் முக­மாக பாட­சாலை மட்­டத்தில் அறி­வூட்டும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்பிடுகின்றார்.
எனினும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைந்தபாடில்லை. உறவுகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான குற்றங்கள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் சமூக மட்டத்தில் இதற்கு தீர்வு தேடினால் மட்டுமே இவ்வாறான துஷ்பிரயோகங்களை முற்றாக ஒழிக்கலாம் என்பது மட்டும் உறுதி.
– எம்.எப்.எம்.ப­ஸீர்–
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger