மருமகளின் கண்களை கத்தியால் தோண்டி எடுத்து தண்டனை கொடுத்த மாமனார். லண்டனில் அதிர்ச்சி சம்பவம்.


பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம் நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக மருமகள் மீது சந்தேகப்பட்ட மாமனார் ஒருவர், குழந்தைகளின் கண் முன்னே, அவர்களின் தாயாரின் கண்களை கத்தியால் தோண்டி எடுத்து கொடூர தண்டனை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது.

லண்டனில் உள்ள சீக்கிய குடும்பம் ஒன்றின் தலைவர் 51 வயது .Manjit Singh Mirgind. இவர் தனது மகனுக்கு Jageer Mirgind’ என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு ஒரு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர்.
இந்நிலையில் முஸ்லீம் ஒருவரிடம் இருந்து தனது மருமகளுக்கு போன்கால் ஒன்று வந்துள்ளது. போனில் பேசியவர் ஆபாசமாக பேசியதால், தனது மருமகள் முஸ்லீம் நபர் ஒருவருடன் கள்ளக்காதல் கொண்டுள்ளதாக தவறாக எண்ணிய மாமனார், ஆத்திரமடைந்து மருமகளின் கண்களை அவருடைய குழந்தைகளின் கண்முனே தோண்டி எடுத்து கொடூர தண்டனை கொடுத்துள்ளார்.
குழந்தைகள் தங்கள் தாயாரை விட்டுவிடும்படி தாத்தாவை கெஞ்சிக்கேட்டுக்கொண்டும் அவர் இவ்விதமாக கொடூர தண்டனை கொடுத்துள்ளார். தற்போது Jageer Mirgind’ என்ற அந்த பெண்ணிற்கு பார்வை பறிபோயுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த லண்டன் போலீஸார் Manjit Singh Mirgind அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger