பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கை 162வது இடம்


பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே 3 ம் திகதி பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் பத்திரிகை சுதந்திர அட்டவணை ஒன்றை 'ரிபோர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்' (Reporters Without Borders) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கை 162வது இடத்தில் இருக்கின்றது.

இந்த அட்டவணையில் பின்லாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது. அட்டவணையில் இங்கிலாந்து 29வது இடத்திலும், அமெரிக்கா 32வது இடத்திலும், ரஷ்யா 148வது இடத்திலும் உள்ளன. சீனா 173வது இடத்திலும், பாகிஸ்தான் 159 ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவுக்கு 140வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு மட்டும் பத்திரிகையாளர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger