களுத்துறை
நகரில் களுத்துறை நகர சபைக்கு சொந்தமான கடைகள் அபிவிருத்தி பணிகளுக்காக இன்று
நண்பகல் அகற்றப்பட்டுள்ளன .களுத்துறை நகரத்தின் பஸ்நிலையம் மற்றும் ரயில்
நிலையத்தின் அருகில் சுமார் நூற்றி ஐம்பது களுத்துறை நகர சபைக்கு சொந்தமான கடைகள்
உள்ளன குறித்த கடைகள் நகர அபிருத்தி அதிகார சபையால் அப்புறப்படுத்தப்பட்டன .
குறித்த
நகர சபைக்கு செந்தமான கடைகளில் சுமார் என்பத்தியைந்து கடைகளே குத்தகைக்கு
எடுக்கப்பட்டுள்ளன குறித்த எண்பத்தி ஐந்து கடைகளில் என்பது கடைகள் முஸ்லிம்களுக்கு
செந்தமானவை என அங்கு கடை நடத்தும் சகோதரர் ஒருவர் தெரிவித்தார்.
இது
தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின்கீழ் உள்ள களுத்துறை நகர சபை உப
தலைவர் அமீர் நசீர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது நகர அபிவிருத்தி அதிகார சபை
குறித்த இடத்தை அபிருத்தி பணிகளுக்கு நகர சபையிடம் கேட்டுள்ளதாகவும் இதற்கு நகர
சபை அனுமதி வழங்காவிட்டாலும் அதனை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையகப்படுத்த
முடியும் என்பதனால் அவர்கள் குறித்த கடைகளை அப்புறப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பிட்ட
பாதிக்கப்பட்ட குத்தகைக்கு எடுத்தவர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நஷ்ட ஈடு
வழங்காது எனவும் தெரிவித்தார்.என்றாலும் சற்று முன் நடந்து முடிந்த
விஷேட கலந்துரையாடலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு ஒரு இடத்தில் களுத்துறை நகர
சபை ஊடக மாற்று கடைகளை பெற்றுக்கொடுக்க தாம் யோசனை ஒன்றை முன்வைத்ததாகவும் அது
தொடர்பாக வரும் ஐந்தாம் திகதி ஆக்கபஊர்வமான் முடிவொன்றினை
எடுக்க உத்தேசித்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின்கீழ்
உள்ள
களுத்துறை நகர சபை உப தலைவர் அமீர் நசீர் மடவளை நியூசுக்கு தெரிவித்தார்.
Post a Comment