மத்திய அரசுடன் ஜெயலலிதா நெருக்கம்: தமிழக பா.ஜ.க. கூட்டணி கட்சிகளிடையே கலக்கம்!!

JUNE 14TH, 2014


வலி­மை­மிக்க  சக்­தி­யான ஜெய­ல­லி­தாவை  வீழ்த்­து­வ­தற்­காக, பா.ஜ.க. தலை­மையில் தமி­ழக கட்­சிகள் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டன. தேர்­தலில் பா.ஜ.க. வெற்­றி­யும் ­பெற்­றது. எனவே, தமது குறிக்கோள் பா.ஜ.க. மூலம் நிறை­வேறும் என்ற எதிர்­பார்ப்பில் கூட்டணிக் கட்­சிகள் இருந்­தன. ஆனால் நடந்­தது என்ன?

எது நடை­பெ­றக்­கூ­டாது என்று அந்தக் கட்­சிகள் எதிர்­பார்த்­த­னவோ அது நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. அதா­வது எந்தக் காரணம் கொண்டும் ஜெய­ல­லி­தா­வுக்கும், பா.ஜ.க. பிர­தமர் நரேந்­திர மோடிக்கும் இடையில் நல்­லு­றவு ஏற்­ப­டக்­கூ­டா­தென்று எதிர்­பார்த்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு, தற்­போது பிர­தமர் மோடியை ஜெய­ல­லிதா சந்­தித்துப் பேசி­யமை பெரும் கலக்­கத்­தையும், அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
லோக்­சபா தேர்­தலில் தமி­ழ­கத்தின் வைகோவின் ம.தி.மு.க., விஜ­ய­காந்தின் தே.மு.தி.க. ஆகி­யன பா.ஜ.க அணியில் இணைந்து போட்­டி­யிட்­டன. இந்த கூட்­ட­ணியில் பா.ஜ.க.வுக்கு ஒரு ஆச­னமும், பா.ம.க.வுக்கு ஒரு ஆச­னமும் மட்டுமே கிடைத்­தன.
எனவே இந்தக் கூட்­டணி தமி­ழ­கத்தில் பெருந்­தோல்­வியை சந்­தித்­தாலும், அகில இந்­திய ரீதியில் பா.ஜ.க.வுக்கு மாபெரும் வெற்றி கிடைத்­தது. எனினும் தமி­ழ­கத்தில் தன்­னுடன் இணைந்து போட்­டி­யிட்ட கட்­சி­களை தம்­முடன் அர­வ­ணைத்­துச்­செல்ல பா.ஜ.க. உறுதி கொண்­டுள்­ளது.
இதே­வேளை தமி­ழ­கத்தில் 37 தொகு­தி­களில் பெரும் வெற்றிபெற்று அ.தி.மு.க. தமது பலத்தை உயர்த்­திக்­கொண்­டுள்­ளது.
மற்­று­மொரு கூட்­ட­ணி­யான தி.மு.க. கூட்­ட­ணியும் படு­தோல்­வியை சந்­தித்­துள்­ளது. அந்தக் கட்­சி­யுடன் விடு­தலை சிறுத்­தைகள் கட்சி, புதிய தமி­ழகம் கட்சி போன்­றவை இணைந்து போட்­டி­யிட்­டன.
லோக்­சபா தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு முன்னர் தமி­ழகக் கட்­சி­க­ளுக்­கி­டையில் கூட்­ட­மைப்பு தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­ற­போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்­கு­மி­டையில் கூட்­டணி ஏற்­ப­டக்­கூடும் என்றும் பேசப்­பட்­டது. ஆனால், அவ்­வாறு கூட்­டணி எதுவும் ஏற்­ப­ட­வில்லை.
இதனால் இரண்டு கட்­சி­களும் தத்­த­மது வழியில் சென்று தேர்­தலில் போட்­டி­யிட்­டன. பா.ஜ.க. கூட்­ட­ணியில் ஜெய­ல­லி­தா­வுக்கு எதி­ரான கட்­சிகள் இணைந்து போட்­டி­யிட்­டன. இதனால் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடை­யி­லான இடை­வெளி அதி­க­ரித்­தது.
இந்த நிலையில் லோக்­சபா தேர்­தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி பிர­த­ம­ரானார். எனவே மோடியை சந்­தித்து தமி­ழ­கத்தின் வளர்ச்சிப் பணி­க­ளுக்கு நிதி ஒதுக்­கித்­த­ரு­மாறு கேட்­ப­தற்கு ஜெய­ல­லிதா தீர்­மா­னித்தார். அதன்­படி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை புது­டில்லி சென்று பிர­த­மரை சந்­தித்தார்.
அத்­துடன் 64 பக்­கங்கள் அடங்­கிய மனு ஒன்­றையும் பிர­த­ம­ரிடம் ஜெய­ல­லிதா வழங்­கினார். அத்­துடன் மத்­திய அமைச்­சர்­க­ளான பொன். ராதா­கி­ருஸ்ணன், ரவி­சங்கர் பிரசாத், நிர்­மலா சீதா­ராமன் ஆகியோர் ஜெய­ல­லி­தாவை டில்­லி­யி­லுள்ள தமிழ்­நாடு இல்­லத்தில் சந்­தித்துப் பேசி­யுள்­ளனர். நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்­லி­யையும் ஜெய­ல­லிதா சந்­தித்தார்.
கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் பிர­தமர் மோடியை சந்­திப்­ப­தற்­காக  தே.மு.தி.க. தலைவர்  விஜ­யகாந்த் டில்­லியில்  தங்­கி­யி­ருந்து முயற்சி செய்தார். ஆனால்  பிர­த­மரை சந்­திப்­ப­தற்கு அவ­ருக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை. இத்­த­னைக்கும் அவர் பா.ஜ.க. கூட்­ட­ணி­யி­லுள்ள முக்­கிய கட்­சி­யொன்றின் தலை­வ­ராக இருக்­கிறார்.
மோடியை சந்­திப்­ப­தற்கு விஜ­ய­காந்­துக்கு கிடைக்­காத சந்­தர்ப்பம் ஜெய­ல­லி­தா­வுக்குக் கிடைத்­துள்­ளது. இது அ.தி.மு.க.வின­ரிடம் மகிழ்ச்­சி­யையும், தே.மு.தி.க.வின­ரிடம் அதிர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
வைகோவும் ஜெய­ல­லி­தாவின் அ.தி.மு.க.வுடன் கூட்­டணி வைத்­துக்­கொள்­வ­தில்லை என்று பகி­ரங்­க­மாக அறி­வித்த பின்­னரே பா.ஜ.க.கூட்­ட­ணியில் இணைந்து கொண்டார். அதே­போன்று திரா­விடக் கட்­சி­க­ளுடன் கூட்­டணி வைத்­துக்­கொள்­வ­தில்லை என்று ஏற்­க­னவே அறி­வித்த நிலை­யி­லேயே பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்­டணி வைத்­துக்­கொண்­டது. தற்போதைய நிலையில் பா.ஜ.க. இந்த மூன்று கட்­சி­க­ளையும் ஒதுக்­கி­விட்டு அ.தி.மு.க.வுடன் நெருங்­கிய தொடர்புகளை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளுமா?
சில­வேளை இந்த மூன்று கட்­சி­க­ளையும் பா.ஜ.க. ஒதுக்­கி­வி­டக்­கூடும். அ.தி.மு.க விட­முள்ள 10 ராஜ்­ய­சபா எம்.பி.க்களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக மேற்­படி மூன்று கட்­சியையும் கூட்­ட­ணி­யி­லி­ருந்து ஒதுக்­கி­விட்டு அ.தி.மு.கவுடன் பா.ஜ.க. நெருக்­க­மான உறவை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளக்­கூடும்.
அர­சி­யலில் எதுவும் நடக்­கலாம். அது மட்­டு­மல்ல, முன்­னைய காங்­கிரஸ் ஆட்­சி­யின்­போது மத்­திய அர­சுக்கும் ஜெய­ல­லி­தாவின் மாநில அர­சுக்­கு­மி­டையில் சுமு­க­மான உறவு இருக்­க­வில்லை. தமி­ழ­கத்­துக்கு மத்­திய அரசு போதிய ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை என்ற ஒரு குறை­பாடு இருந்து வந்­தது. குறிப்­பாக நிதி­யு­தவி, மின்­சாரம், காவி­ரிநீர் பிரச்­சினை என்­ப­வற்றில் மத்­திய அரசு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை என்று ஜெய­ல­லிதா பகி­ரங்­க­மா­கவே குற்­றஞ்­சாட்டி வந்தார்.
தற்­போது ஆட்­சிக்கு வந்­துள்ள பா.ஜ.க. ஆட்­சி­யுடன் நெருங்­கிய உற­வு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளவே ஜெய­ல­லிதா விரும்­பு­கிறார். இந்த நெருக்­க­மான உறவை ஏற்­ப­டுத்­திக்­கொள்ளும் நோக்­கத்தில் ‘பொது­நலம்’ மட்­டு­மல்ல, பெரிய ‘சுய­ந­லமும்’ ஜெய­ல­லி­தா­வுக்கு இருக்­கி­றது.
அர­சியல் ரீதி­யாக சக்­தி­ப­டைத்­த­வ­ராக ஜெய­ல­லிதா இருந்­தாலும், அவர் மீது பெங்­க­ளூரில் சொத்­துக்­கு­விப்பு வழக்கு நடை­பெற்று வரு­கி­றது. இந்த வழக்­கி­லி­ருந்து மீள முடி­யாமல் தத்­த­ளிக்­கிறார். முன்­னைய மத்­திய காங்­கிரஸ் அரசு இதனை இறுக்­கிப்­பி­டித்து முன்­னெ­டுத்து வந்­தது.
எனவே தற்­போ­தைய பா.ஜ.க. ஆட்­சி­யா­ள­ரு­டனும் முரண்டு பிடிக்­காமல், ஒத்­து­ழைப்­பது போன்ற பாவ­னையில் சொத்­துக்­கு­விப்பு வழக்­கி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­கான முனைப்­புடன் ஜெய­ல­லிதா செயற்­பட்டு வரு­கிறார். இந்த நிலை­யி­லேயே பிர­த­மரை சந்­திக்க புது­டில்லி சென்­ற­போது மத்­திய நிதி­ய­மைச்சு அருண் ஜெட்­லியை சந்­தித்துப் பேசி­யுள்ளார்.
முன்­னைய ஆட்­சியில் நிதி­ய­மைச்­ச­ராக இருந்த தமி­ழ­கத்தைச் சேர்ந்த ப.சிதம்­ப­ரத்தை ஒரு தடவை கூட ஜெய­ல­லிதா சந்­தித்­தது கிடை­யாது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
ஜெய­ல­லிதா புது­டில்­லியில் தமிழ்­நாடு  இல்­லத்தில் தங்­கி­யி­ருந்­த­போது அவரை மத்­திய அமைச்­சர்கள் சிலர் சந்­தித்துப் பேசி­யுள்­ளனர். அதில் மிகவும் முக்­கி­ய­மாக குறிப்­பி­டக்­கூ­டிய அமைச்­சர்தான் ரவி­சங்கர் பிரசாத். பிர­பல வழக்கறிஞ­ரான ரவி­சங்கர் பிரசாத் பெங்­க­ளூரில் நடை­பெற்று வரும் ஜெய­ல­லி­தாவின் சொத்­துக்­கு­விப்பு வழக்­கு­களில் ஆஜ­ரா­னவர். அவ்­வா­றான ரவி­சங்கர் பிரசாத் தற்­போது மத்­திய சட்­டத்­துறை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்
எனவே, பெங்­களூர் சொத்­துக்­கு­விப்பு வழக்கில் தனக்கு விடு­தலை கிடைக்கும் என்று ஜெய­ல­லிதா நம்­பிக்கை கொண்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இது­போன்ற பல்­வேறு திட்­டங்­க­ளு­ட­னேயே பா.ஜ.க. அர­சுடன் ஜெய­ல­லிதா நெருக்­க­மான உற­வு­களை முன்­னெ­டுத்து வரு­கி­றார்.
இந்த நெருக்கம் விஜ­ய­காந்தின் தே.மு.தி.க., வைகோவின் ம.தி.மு.க., ராம­தாஸின் பா.ம.க. போன்ற கட்­சி­க­ளுக்கு கலக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பது உண்மை.
அத்­துடன் தி.மு.க.வுக்கும், அதன் அணி­யி­லுள்ள ஏனைய கட்­சி­க­ளுக்­கும்­கூட கலக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பது உண்மை. குறிப்­பாக தி.மு.க.முன்னாள் அமைச்சர் ஆ.ராசா­வுடன் தொடர்­பு­டைய ஸ்பெக்ட்ரம் அலைக்­கற்றை வழக்கு இறுக்க­ ம­டை­யக்­கூ­டிய நிலை காணப்­ப­டு­கி­றது.
லோக்­சபா தேர்­தலில் பாரிய தோல்­வி­ய­டைந்த தி.மு.க. தமது தோல்­விக்­கான கார­ணங்கள் தொடர்பில் ஆராய்ந்து வரு­கி­றது மட்­டு­மின்றி, கட்­சியின் நிரு­வாகக் கட்­ட­மைப்பை சீர­மைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையையும் மேற்­கொண்­டுள்­ளது. அத்­துடன் ஒரு குழு­வையும் நிய­மித்­துள்­ளது.
இந்தத் தோல்­வி­யிலும் துவண்டு போகாமல் அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை தி.மு.க. முன்­னெ­டுத்து வரு­கி­றது.
இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கரு­ணா­நிதி தமது 91ஆவது பிறந்­த­நாளைக் கொண்­டா­டினார். கரு­ணா­நிதி இந்­த­ளவு உயர்­வ­தற்கு அவ­ரது கடின உழைப்பே கார­ண­மாகும். ஆரம்ப காலத்தில் கட்சிக்காக உழைத்து கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல.
மூட­நம்­பிக்­கை­களும், சமூக அடக்­கு­மு­றையும், குல­பேதம், வர்க்க ஒடுக்கு முறை நில­விய கால­கட்­டத்தில் அவற்றை உடைத்­தெ­றிந்து சமூக விடு­த­லைக்­காக போரா­டிய முன்­னோ­டி­களில் கரு­ணா­நி­தியும் ஒருவர். பெரியார் ஈ.வே.ராவின் அடியைப் பின்­பற்றி அறிஞர் அண்­ணாவின் தம்­பி­களில் ஒரு­வ­ராக அவ­ருக்கு தோள் கொடுத்து தமி­ழரின் சமூக விடு­த­லைக்­காக உழைத்­தவர். அதனை தமிழினம் என்றுமே மறக்க முடியாது. அர­சி­யலில் பெரும் சாதனை புரிந்­தி­ருந்­தாலும் அர­சி­ய­லுக்­கப்பால் தமி­ழுக்கும், தமிழ் பண்­பாடு, கலை, கலா­சாரம், தமிழ் மக்­க­ளுக்கு அவர் செய்த சேவைகள் ஏராளம். அது வர­லா­றாக தொகுக்­கப்­பட வேண்டியுள்ளது.
இந்த 91 வய­திலும் தள­ராமல் உழைத்­துக்­கொண்­டி­ருக்­கிறார். தெளி­வான சிந்­தனை, திட­மான கொள்­கை­யுடன் தி.மு.க. வை மட்­டு­மன்றி தமி­ழர்­களை வழி­ந­டத்திச் செல்லும் கரு­ணா­நிதி பல்­லாண்­டுகள் வாழ வேண்­டு­மென்­பதே அவரது அபிமானிகளின் அவா.
நல்லதம்பி நெடுஞ்செழியன்
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger