கருத்தடை மாத்திரையால் வாழ்விழந்த பெண்


சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் கருத்தடை மாத்திரை உட்கொண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மருந்து நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சுவிஸின், சூரிச் நகரத்தை சேர்ந்த செலின் ப்லெகர் (22). இவர் 5 வருடங்களுக்கு முன்பு ஜேர்மனி மருத்துவ நிறுவனம் பேயர் தயாரித்த யாஸ்மீன் என்ற கருத்தடை மாத்திரை உட்கொண்டதால் நுரையீரல் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இவர் பெற்றோர்கள் 5.3 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் சூரிச் மாகாண நீதிமன்றம் மாத்திரை உட்கொண்டதற்கு எந்தவித ஆதரமும் இல்லை எனக் கூறி வழக்கை நிராகரித்தது.
இந்நிலையில் தற்போது CSS காப்புறுதி நிறுவனம் செலின்க்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து CSS நிறுவனத்தின் இயக்குனர் கொலடெரெலா கூறுகையில், நீதிமன்றம் வழக்கை தீவிரமாக வீசாரிக்கவில்லை என்றும், இதுபோன்று பல்வேறு பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் யாஸ்மீன் என்ற இந்த மருந்தால் அமெரிக்காவில் 10,000க்கும் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger