இஸ்ரேல் புதிய அதிபராக ரியூவன் தேர்வு அடுத்த மாதம் பதவி ஏற்பு


இஸ்ரேல் நாட்டில் அதிபர் தேர்தல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு அதிபரை தேர்ந்தெடுக்கின்றனர்.

அங்கு தற்போது ஷிமோன் பெரஸ், அதிபர் பதவி வகித்துவந்தார். அவரது பதவிக்காலம் முடியும் நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ரியூவன் ரிவ்லினும், எதிர்க்கட்சி சார்பில் ஷீட்ரிட்டும் போட்டியிட்டனர்.

இதில் புதிய அதிபராக 74 வயது ரியூவன் ரிவ்லின் தேர்ந்தெடுக்கப்பட்டார். 120 பேரைக்கொண்ட பாராளுமன்றத்தில் ரியூவன் ரிவ்லின் 63 ஒட்டுக்களையும், ஷீட்ரிட் 53 ஓட்டுக்களையும் பெற்றனர்.

புதிய அதிபர் ரியூவன் அடுத்த மாதம் 24–ந் தேதி பதவி ஏற்கிறார்.

இந்த நாட்டில் பிரதமருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் தரப்பட்டுள்ளன. அதிபர் பதவி வெறும் அலங்காரப்பதவி மட்டும்தான்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger