பள்ளி சென்று திரும்பி வந்த மாணவியை தனது தாயர் உதவியுடன் ஆட்டோ ஒன்றில் கடத்திச் சென்ற சிங்கள இளைஞன், குறித்த மாணவியை 50 நாட்களாக பூட்டிவைத்து கற்பழித்துள்ளான். மேற்படி நெறினி-கம்மன என்னும் பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன், பாடசாலை மாணவியை கடத்திச் சென்று பெலநறுவையில் உள்ள மலைப் பாங்கான இடம் ஒன்றில் தடுத்து வைத்துள்ளார். இக் கடத்தல் சம்பவம் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 50 நாட்களாக அடைத்து வைத்து அம்மாணவியை இவர் கற்பழித்துள்ளார். பொலிசார் பல முயற்சிகளை மேற்கொண்டும் இவர் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
தற்போது அந்த இளைஞன் தானாக முன்வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அம்மாணவியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு மாவட்ட நீதவான் தெரிவித்துள்ளதோடு, குறித்த இளைஞனை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளார் என மேலும் அறியப்படுகிறது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைபெற்றுவரும் மாணவியை பொலிசார் விசாரித்து வருகிறார்கள். இதேவேளை குறித்த இளைஞரின் தாயார் இன்னமும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தலைப்பட்சமாக காதலிப்பதும், தான் காதலிக்கும் பெண் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை என்றால் அவரை கடத்திச் செல்வதும் தற்போது சிங்களப் பகுதிகளில் மிகவும் சகஜமாகிவிட்டது.
முன் நாள் இராணுவச் சிப்பாய்களே இதனை செய்துவருகிறார்கள். அத்தோடு அவர்களின் உறவினர்களும் இதுபோன்ற செயல்களில் சற்றும் பயமில்லாமல் செய்துவருகிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Post a Comment