ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் புதிய இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்க ஆகியோருக்கிடையில் இன்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது புதிய இந்திய உயர் ஸ்தானிகருக்கு செங்கம்பல வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்போதுஇந்திய உயர் ஸ்தானிகர் .சிங்க தனது நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.
எந்த ஒரு நாட்டுத் தூதுவருக்கும் செங்கம்பல மரியாதை வழங்கப்பட வில்லை. ஓரிரு தடவைகள் நடந்திருக்கலாம் பெயர் குறிப்பிடும் அளவில் நடக்கவில்லை. எனலாம் ஆனால் வழமைக்கு மாறாக இலங்கை வந்த புதிய இந்திய உயர்தானிகருக்கு வழங்கப்பட்ட மரியாதை நாட்டுத் தலைவருக்கு வழங்குவதற்கு ஈடாகும். இவ்வாறான செயற்பாடுகள் அன்மைய இந்தியாவின் ஆத்திரங்களை குறைப்பதற்காகவா என கொழும்பு – இந்திய அவதானிகளிடத்தில் சலசலப்பை ஏற்றடுத்தியுள்ளது..?
கனடா புதிய உயர் ஸ்தானிகர்கள்…
புதிதாக நியமனம் பெற்றுள்ள இந்திய மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான உயர் ஸ்தானிகர்கள் இன்று புதன்கிழமை தங்களது நியமன கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங் மற்றும் கனேடிய உயர் ஸ்தானிகர் சேலி வைடிங்க் ஆகியோர் இந்த நியமனக் கடிதங்களை கையளித்தனர்.
Post a Comment