ஆதரவு வழங்கியமைக்கு நன்றி: இராணுவ தளபதி
எனக்கு ஆதரவு வழங்கியதை போன்று அடுத்து வரும் இராணுவ தளபதிக்கும் ஆதரவு வழங்குமாறு இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
யூலை 30ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள இராணுவ தளபதி வவுனியா ஆயுத படைகளின் தலைமையகத்திற்கு இன்று புதன்கிழமை சென்றிருந்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன் இராணுவத்தினர் தனக்கு வழங்கிய ஆதரவுக்கு இராணுவ தளபதி நன்றி தெரிவித்தார். “சேவையில் இணையும்போது ஒரு இராணுவ வீரன் தனது ஓய்வுபெறும் திகதியை அறிந்துகொள்வான். இராணுவத்தினருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படுவதில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
இதனை கருத்திற்கு கொண்டு குறிப்பிட்டளவான தமது சேவைக்காலத்தில் தொழில்வாண்மையை ஒவ்வொருவரும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment