தமிழர்களுக்கு எவ்வித பாதுகாப்புப் பிரச்சினைகளும் கிடையாது – சம்பிக்க



தமிழர்களுக்கு எவ்வித பாதுகாப்புப் பிரச்சினைகளும் கிடையாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்க வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழ் சனத்தொகையில் 60 வீதமானவர்கள் தெற்கிலேயே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம் வெள்ளவத்தையில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு நன்மைகள் ஏற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளவத்தை வாழ் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர், அவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை கிடையாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டிது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் இழைத்த தவறுகளை திருத்திக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளது என சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
champika ranawaka_CI
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger