கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தை தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
டெங்கு நுளம்பு அபாயம் காரணமாகவே பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தை தற்காலிகமாக மூடுவதாக அப் பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த நாட்களில் பெய்த அதிக மழை காரணமாக சட்டபீட கட்டிடத் தொகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் கொழும்பு நகர சபையின் வைத்திய திணைக்களத்தினர் ஆய்வு செய்தனர்.
இதன்போது அங்கு டெங்கு நுளம்பு பெருகும் இடம் ஒன்று இவர்களால் இனங்காணப்பட்டது.
இதன்காரணமாக உடனடியாக சட்டபீடத்தை மூடுமாறு வைத்திய திணைக்களத்தினர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இதன்படி நேற்று (03) மாலை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடம் தற்காலியமாக மூடப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் சட்ட பீடத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அதேவேளை முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.
Post a Comment