இந்து அடிப்படைவாதக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் பாராளுமன்றக் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஆறு நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தின் போது, வடமாகாண ஆளுநரின் மாலை விருந்து உபசாரத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விருந்து உபசாரத்திலும் இவர்கள் கலந்து கொள்கின்றனர்.
நல்லெண்ண அடிப்படையிலான பயணம் என்று கூறிக்கொள்ளும் இக்குழுவினர் இந்திய மேலாதிக்க நலனை நிலைநாட்டவே இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் சுய நிர்ணய உரிமைகான போராட்டம் நடத்தும் மக்களுக்கு எதிரான அருவருப்பான கருத்துக்களை முன்வைக்கும் சமூக விரோத அடிப்படைவாதக் கட்சியான பாரதீய ஜனதா, ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்குவதற்குப் பல தடவைகள் முன்னின்று செயற்பட்டுள்ளது.
Post a Comment