ஆளில்லா உளவு விமானமொன்று இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது.
மொறட்டுவ பல்கலைக்கழ பொறியியல் பீடத்தினாலேயே இந்த விமானம் ஆளில்லா உளவு விமானம தயாரிக்கப்பட்டுள்ளது.
யூ.ஏ.வீ என்ற பெயரிலான இந்த ஆளில்லா உளவு விமானத்தை மொறட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹன முனசிங்கவும் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், இணைந்து தயாரித்துள்ளனர்.என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment