சண்டே லீடர் பத்திரிகை மீது சூனியம் போடும் மேர்வின்!



சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக பில்லி, சூனியம் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டு உள்ளார் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா.
இவர் பெலியத்த பிரதேசத்தை சேர்ந்த பல மந்திரவாதிகளுடனும் இது சம்பந்தமாக ஆலோசனைகள் நடத்தி உள்ளார்.
ஊடகவியலாளர்கள் இது குறித்து வினவியபோது தயங்காமல் ஒப்புக் கொண்டு உள்ளார்.
“ சண்டே லீடர் பத்திரிகை என் மீதும், என் மகன் மீதும் இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது. நேற்றும் ஒரு செய்தி அறிக்கையிடப்பட்டது. நான் ஊடகவியலாளர்களை மிரட்டவோ, அடிக்கவோ போவதில்லை. சேறு வீசுவது இவர்களின் உரிமைகளில் ஒன்று.
ஆனால் பொய்களை எழுதுகின்றவர்கள் மீதும், எழுதுகின்றவர்களை தூண்டுபவர்கள் மீதும் பில்லி, சூனியம் ஏவ உள்ளேன். உண்மையானவர் யார்? என்பதை கடவுள் தீர்மானிப்பார். நான் தவறு செய்தவனாக இருந்தால் சூனியம் எனக்கே திரும்பி வரும். நான் எந்தவொரு தவறும் செய்யவில்லை. எனவே எனக்கு பயம் கிடையாது.
ஆயினும் மூன்றாம் தர ஊடகவியலாளர்களுக்கு இலஞ்சமாக சாராயம் கொடுக்க நான் தயாரில்லை. என்னைப் பற்றி அவதூறு எழுத வேண்டாம் என்று சொல்லி அவர்கள் பின்னால் திரிய நான் தயார் இல்லை. ”
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger