குருநாகலில் மாணவர்கள், மாணவிமீது பாலியல் துஷ்பிரயோகம்-
பாடசாலை முடித்து வீடு செல்லும் வழியில் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களை வாரியபொல கல்கந்தயிலுள்ள சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கும்படி ரம்படகல நீதிமன்ற நீதிவான் டி. எம். டி. பி. பண்டார உத்தரவிட்டார்.
பாடசாலை முடித்து வீடு செல்லும் வழியில் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களை வாரியபொல கல்கந்தயிலுள்ள சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கும்படி ரம்படகல நீதிமன்ற நீதிவான் டி. எம். டி. பி. பண்டார உத்தரவிட்டார்.
தெல்கந்த உடகந்த பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன் ஒரு மாணவனின் உதவியுடன் மற்ற மாணவன் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவியின் பெற்றோர் பிரிந்து வாழ்வதாகவும் தாய் மறுமணம் செய்து கொண்டதால் இம் மாணவி தனது பாட்டியுடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவி குருநாகல் சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தியபோது வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இம் மாணவியை பாட்டியிடம் ஒப்படைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.
அம்பாந்தோட்டையில் சீனப் பிரஜை 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பு-
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கடுவௌ பிரதேசத்தில் மேம்பால நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கடுவௌ பிரதேசத்தில் மேம்பால நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
26 வயதான குறித்த சீனப் பிரஜை, நிர்மாணப் பணிகளின் போது சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளார்.
இதனால் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சீனப் பிரஜையின் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment