குருநாகலில் மாண­வர்­கள், மாணவிமீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் / அம்பாந்தோட்டையில் சீனப் பிரஜை 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பு

 

குருநாகலில் மாண­வர்­கள், மாணவிமீது பாலியல் துஷ்­பி­ர­யோகம்-
பாட­சாலை முடித்து வீடு செல்லும் வழியில் 14 வயது மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய அதே பாட­சா­லையைச் சேர்ந்த இரு மாண­வர்­களை வாரி­ய­பொல கல்­கந்­த­யி­லுள்ள சிறுவர் இல்­லத்தில் ஒப்­ப­டைக்­கும்­படி ரம்­ப­ட­கல நீதி­மன்ற நீதிவான் டி. எம். டி. பி. பண்­டார உத்­த­ர­விட்டார்.
தெல்­கந்த உட­கந்த பிர­தே­சத்தில் இச் சம்­பவம் இடம் பெற்­றுள்­ள­துடன் ஒரு மாண­வனின் உத­வி­யுடன் மற்ற மாணவன் மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக ரிதி­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
மாண­வியின் பெற்றோர் பிரிந்து வாழ்­வ­தா­கவும் தாய் மறு­மணம் செய்து கொண்­டதால் இம் மாணவி தனது பாட்­டி­யுடன் வசித்து வரு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.
மாணவி குரு­நாகல் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் வைத்­திய பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தி­ய­போது வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இம் மாண­வியை பாட்­டி­யிடம் ஒப்­ப­டைக்­கும்­படி நீதிவான் உத்தரவிட்டார்.
அம்பாந்தோட்டையில் சீனப் பிரஜை 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பு-
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கடுவௌ பிரதேசத்தில் மேம்பால நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
26 வயதான குறித்த சீனப் பிரஜை, நிர்மாணப் பணிகளின் போது சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளார்.
இதனால் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சீனப் பிரஜையின் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- See more at: http://www.athirady.com/tamil-news/news/249188.html#sthash.uWItynWd.dpuf
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger