காத்தான்குடியில் அமைக்கும் பல்கலைக்கழகத்தினை உடனடியாக நிறுத்த வேண்டும் – பொது பல சேனா


பொதுபல சேனவின் கூட்டம் நேற்று (9) அம்பாறை நகரில் நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய பொது பல சேன செயலாளரின் ஞான தேரர் உரையின்  ஒலிப்பதிவு தனியார் தொலைக்காட்சிகளில் நேற்று இரவு 9.30 மணி செய்தியில் ஒளிபரப்பானது.

அச் செய்தியில் இருந்து …
“காத்தான்குடியில் அமைக்கும் உலமாக்களுக்குரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும். இதனை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அம்பாறையில் இருந்து வேண்டுகோள் விடுக்கின்றோம். இல்லாவிட்டால் இதற்காக பாரிய ஆர்ப்பாட்டத்தினையும் எதிர்ப்பையும் நாடுபூராவும் நடாத்துவோம்.
இப் பல்கழைக்கழம் காத்தான்குடியில் அமைந்தால் வஹாபி, சூபி ஊடாக இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில் உருவாகும். இப் பல்கலைக்கழகம் அமைப்பதையிட்டு எமது எதிர்பபை தெரவிக்கின்றோம். இப் பல்கலைக்கழகத்தினால் எமது நாடு பாரிய அச்சுருத்தலை எதிர்நோக்கும்” என ஞானதேரர் தெரிவித்திருந்தார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger