இன்று புனித கஃபா கழுவப்பட்டது


இரண்டு புனித பள்ளிவாயல்களை மேற்பார்வை செய்பவரும், சவூதி அரபியாவின் மன்னருமான அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் அவர்களின் சார்பாக புனித மக்கா நகரின் ஆளுநரும், இளவரசருமான காலித் அல் பைசல் அவர்கள் இன்று புனித கஃபாவை கழுவியதாக சவூதி அரபிய செய்தி நிறுவனம் (Saudi Press Agency) செய்தி வெளியிடுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் சுன்னஹ்வின் அடிப்படையில் புனித கஃபாவின் சுவர்கள் சம்சம் தண்ணீர் மற்றும் பன்னீர் வாசனைத் திரவியங்களை (Rose perfume) கொண்டு கழுவப்பட்டதாக சவூதி அரபிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிடுள்ளது.
இந்த நிகழ்வில் அஷ்ஷேக் அப்துல் ரஹ்மான் பின் அப்துல் அசீஸ் அழ சுதைஸ், அஷ்ஷேக் முகம்மத் அல் குசையம், புனித மக்கா நகரின் மாநகராட்சி மன்ற தலைவர் உசாமா அழ பார் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger