திருமலை நகரசபை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா விளக்கம் கோரல்-
திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது அந்தப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என அமெரிக்கத் தூதரகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது அந்தப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என அமெரிக்கத் தூதரகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, திருகோணமலை பிரதேச மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தும் உயரிய நோக்கிலேயே நாம் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டோம்.
இவ்வாறான எமது நோக்கம் அனைத்து மாணவர்களிடையேயும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் தோற்றுவிக்கும். கடந்த ஆண்டு கண்டி பொதுநூலகத்திலும் பின்னர் 2011ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான நிலையங்களை நாம் உருவாக்கினோம்.
இந்த நிலையங்களை நாம் எந்த அரசியல் நோக்கத்துடனும் உருவாக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த உடன்பாடு குறித்து, கிழக்கு மாகாண முதல்வர் அப்துல் மஜீத் இரண்டு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
திருகோணமலை நகர முதல்வர் மற்றும், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசின் ஆகியோருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் குறித்து வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக கிழக்கு முதல்வர் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
Post a Comment