கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் தொற்று தொடர்பில் மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் எதிர்வரும் இரு மாதங்களில் டெங்கு நோய் வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக டெங்கு அழிப்பு தொடர்பில் கொழும்பு நகரசபை மற்றும் கொழும்பு மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளவேண்டிய செயற்திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு, மேல் மாகாண சபை, கொழும்பு நகரசபை, பொலிஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
தற்போதுள்ள டெங்கு நோயாளர்களில் 46 வீதமானவர்கள் கொழும்பில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் 152இல் டெங்கு நுளம்பு குடம்பிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் 52பாடசாலைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் 12 பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment