உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி ஆங்காங்கே அடைக்கலம் புகுந்திருக்கும் பக்தர்களை உள்ளூர்வாசிகள் மிரட்டி அவர்களின் நகை, பணம் ஆகியவற்றை பறித்து செல்கின்றனர்.
வெள்ளத்தில மிதந்து செல்லும் பிணங்களில் உள்ள நகைகளுக்காக உடல் உறுப்புகளை வெட்டி சிலர் கோரத் தாண்டவம் ஆடி வருவதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
சவுகாசி என்ற இடத்தில் உள்ள காட்டுப் பகுதியில் அண்ணன், தம்பிகள் 3 பேரை வெட்டிக்கொன்ற கும்பல் அவர்களிடமிருந்து ரூ.17 லட்சத்தை பறித்துச் சென்றது.
இந்த கொடுமைகளை விட எல்லாம் உச்சகட்ட கொடுமைகயாக கவுரிகண்ட் பகுதியில் ஒதுங்கி நின்ற ஒரு பெண் பக்தர் மற்றும் அவரது மகளை ஒரு கும்பல் கற்பழித்துக் கொன்ற சம்பவம் தற்போத தெரியவந்துள்ளது.
அவர்களது பிரேதங்கள் கோந்தலு பாணி கிராமத்தில் இன்று கரை ஒதுங்கின. இதே பகுதியில் பீகாரை சேர்ந்த இன்னொரு பெண்ணும் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
ராணுவத்துடன் இணைந்து உள்ளூர் போலீசாரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் இதைப்போன்ற குற்றங்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குறை கூறுகின்றனர்
Post a Comment