மாத்தளை நீதவானுக்கு திடீர் இட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை பாரிய மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணைகளை நீதவான் சதுரிகா டி சில்வா மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், திடீரென உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீதவான் சதுரிகா டி சில்வா கொழும்பு புதுக்கடை நீதி மன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றின் மேலதிக நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதவான் சதுரிகா டி சில்வா நாளை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.
2010ம் ஆண்டு முதல் நீதவான் சதுரிகா மாத்தளை நீதவானாக கடமையாற்றி வந்தார்.
இதேவேளை, மாத்தளை மனித புதை குழி தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment