திருக்கோவிலில் 4000 ஏக்கர் காணி சுவீகரிக்க நடவடிக்கை



காரை­தீவு, திருக்­கோவில் பிராந்­தி­யத்தில் மேற்­குப்­ பு­றத்­தி­லுள்ள சுமார் 4000 ஏக்கர் தமிழ் மக்­களின் காணிகள் வனப்­பா­து­காப்பு அதி­கா­ரி­களால் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. அதற்­கான எல்லைக் கற்கள் கடந்த நான்கு தினங்­க­ ளாக நடப்­பட்­டு­வ­ரு­கின்­றன.
இந்த எல்­லைக்­கற்கள் பொத்­துவில் தொடக்கம் சாகாமம் வரை நடப்­பட்­டு­வ­ரு­கி­றது. பயிர்ச்­செய்­கைக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்ள காணி­க­ளுக்­குள்­ளா­கவும் இக்­கற்கள் நடப்­பட்­டுள்­ளமை அதிர்ச்­சி­யையும் வேத­னை­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.
தம்­மிடம் இக்­கா­ணி­க­ளுக்­கான உறு­திகள் பெர்­மிட்­டுகள் இருக்­கத்­தக்­க­தாக இவ்­வாறு அத்­து­மீறி பிர­வே­சித்து வன பரி­பா­லன திணைக்­க­ளத்­திற்­கான காணி என்று கூறி எல்­லைக்­கற்கள் நடு­வது ஜன­நா­ய­கமா? என அம்­மக்கள் கேட்­கின்­றனர்.
கஞ்­சி­கு­டிச்­சா­று­ கோ­மாரி ரூபஸ்­குளம் சாகாமம் பெரிய திலாவை வட­கண்டம் போன்ற பகு­தி­களில் மக்­களின் வாழ்­வா­தா­ர­மாக அமைந்த வயற்­கா­ணி­களில் ஏறக்­கு­றைய 4000 ஏக்கர் அளவில் அரச காணி எனும் பேரில் வனப்­பா­து­காப்பு அதி­கா­ரி­களால் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வி­ருப்­பது குறித்து மக்கள் கிளர்ந்­தெ­ழுந்­துள்­ளனர்.
பிரஸ்­தாப காணி­களில் குறிப்­பிட்ட உரி­மை­யா­ளர்கள் 1960 முதல் 1990 வரை பயிர்ச்­செய்­கை­யி­லீ­டு­பட்­டு­வந்­தனர். பின்னர் யுத்தம் கார­ண­மாக சில காலம் அப்­ப­குதி விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்­டிற்­குள்ளும் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டிற்­குள்ளும் இருந்த கார­ணத்­தினால் பயிர்ச்­செய்­கை­யி­லீ­டு­பட முடி­ய­வில்லை.

பின்பு சமா­தான கால­கட்­டத்தில் மீண்டும் 2001 முதல் 2004 வரை பயிர்ச்­செய்­கை­யி­லீ­டு­பட்­டனர்.தற்­போதும் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணி­களில் பயிர்ச்­செய்கை செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் பயிர்­க­ளுக்­கூ­டாக எல்­லைக்­கற்கள் இடப்­பட்­டுள்­ளமை அதிர்ச்­சி­யையும் ஆத்­தி­ரத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger