4000 குடும்பங்களை குடியேற்ற கேப்பாபிலவில் 2024 ஏக்கர் காணியில் இராணுவக் குடியிருப்பு



முல்லைத்தீவு கேப்பாபிலவில் 4 ஆயிரம் இராணுவக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்காக 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதhக தகவல்கள் வெளியாகி உள்ளன. முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரதேசத்தில் போர் முடிவுற்ற பின்னர் இராணுவத்தினரால் பெரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டது.
இதன் காரணமாகக் கேப்பாபிலவில் பொது மக்களின் காணிகள் உட்பட 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.
இதில் ஆயிரத்து 500 ஏக்கர் வரையிலான காணி அரச காணி என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 526 ஏக்கர் காணி தனியாருக்குச் சொந்தமானது.
4ஆயிரம் இராணுவக் குடியிருப்புக்களை அமைப்பதற்காகவே இந்தக் காணியைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் நில அளவைத் திணைக்களத்தினால் குறித்த காணிகளை அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகின்றது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger