3 நாள் கேளிக்கைக்காக ரூ.110 கோடி செலவிட்ட சவுதி இளவரசர்-
எண்ணெய் வளம் மிக்க இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் மன்னராக நயீப் பின் அப்துல்-அஜீஸ் அல் சவுப் ஆட்சி புரிந்து வருகிறார்.
இவரது மகனான இளவரசர் ஃபஹ்த் அல்-சவுத், அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறார்.
சமீபத்தில் இவருக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதனையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள டிஸ்னி லேண்டில் தனது கல்லூரி தோழர்களுக்கு ‘ட்ரீட்’ அளிக்க இளவரசர் முடிவு செய்தார்.
சுமார் 60 நண்பர்கள் புடைசூழ டிஸ்னி லேண்டிற்கு வந்த இளவரசருக்காக அங்குள்ள கலைஞர்கள் சிறப்பு காட்சிகளை நடத்தி மகிழ்வித்தனர்.
இப்படி 3 நாட்களில் கேளிக்கைக்காக 12 1/2 கோடி பிரிட்டிஷ் பவுண்டுகளை (இந்திய மதிப்புக்கு 110 கோடி ரூபாய்) ஃபஹ்த் அல்-சவுத் செலவிட்டுள்ளார்.
Post a Comment