வவுனியாவில் 119 பேருக்கு அரச நியமனம் (புகைப்படங்கள் இணைப்பு) / இலங்கைப் பெண்களை சிங்கப்பூரில் விபசாரத்தில் ஈடுபடுத்திய இலங்கையர் கைது

 

வவுனியாவில் 119 பேருக்கு அரச நியமனம் (புகைப்படங்கள் இணைப்பு)-
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 119 பேருக்கு சமுர்த்தி நியமனங்களினை அரசாங்கம் வழங்கியுள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியாலும் அரசுடன் சேர்ந்து இயங்கும் அரசியல் கட்சிகளாலும் சிபார்சு செய்யப்பட்ட 119 பேரினை சமுர்த்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கும் நியமன கடிதங்கள் நேற்றைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய றிசாட் பதியுதீனால் இதற்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நுனைஸ்பாறூக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கனகரத்தினம், சுமதிபாலா மற்றும் சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கைப் பெண்களை சிங்கப்பூரில் விபசாரத்தில் ஈடுபடுத்திய இலங்கையர் கைது-
இலங்கை யுவதிகளை தொழிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த ஆனமடுவைச் சேர்ந்த நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர் சிங்கப்பூரில் விபசாரம் நடத்தி வந்தவர்களில் முக்கியமான நபரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் சமீபத்தில் ஐந்து யுவதிகளை அழைத்துச் சென்று பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபரால் பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதிகள் இவரது பிடியிலிருந்து தப்பிச் சென்று சிங்கப்பூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
பொலிஸார் இந்த நபரைக் கைதுசெய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இந்நபர் சிங்ப்பூரிலிருந்து இலங்கை வர முயற்சித்த போது சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் 119 பேருக்கு அரச நியமனம் (புகைப்படங்கள் இணைப்பு)…
DSCF3686
DSCF3687
DSCF3692
DSCF3697
DSCF3699
DSCF3710
DSCF3715
DSCF3716
DSCF3734
DSCF3731
DSCF3758

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger