சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் சிறைக் கைதிகளின் உளச் சுகாதாரத்தை விருத்தி செய்ய விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக உளநல விசேட நிபுணர்கள் மூவரை வெலிக்கடை, போகம்பர மற்றும் மஹர சிறைச்சாலைகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் உளநல பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் உளநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் இருப்பதாகவும் அவ்வாறனவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு விசேட உளநல பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment