நாட்டில் போலிநாணயத்தாள்களின் பாவனை அதிகரித்துள்ளதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் 500 ரூபா, 1000 ரூபா மற்றும் 2000 ரூபா நாணயத்தாள்கள் மோசடி தொடர்பில் பலர் கைதுசெய்யட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் போலி நாணயத்தாள்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் எனவே பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெருந்தொகையான நாணயத்தாள்களை கையாள்பவர்கள் ஒவ்வொரு தாளாக பரிசோதிக்க வேண்டுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment