குடிப் பழக்கத்தை நிறுத்த மருந்து அறிமுகம்


குடிப் பழக்கத்தை நிறுத்த மருந்து அறிமுகம்-
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க, புதிய மருந்து லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘இந்த மருந்தை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை, மது அருந்தும் இச்சை கட்டுப்படும்’ என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மது அருந்துபவர்களின் உடல் நிலை மோசமடைவது மட்டுமின்றி, ஏராளமான சாலை விபத்துகள் மற்றும் சமூக விரோத செயல்கள் நிகழ்கின்றன.
விஞ்ஞானிகளின் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின், இதற்கு தீர்வு கிடைத்துள்ளது. பிரிட்டன் விஞ்ஞானிகள் குழு, தன் ஆராய்ச்சியின் பயனாய், புதிய மருந்து ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த மருந்தை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இந்த மருந்து, பிரிட்டன் அரசின் ஒப்புதலுடன், விற்பனைக்கு வந்துள்ளது.
மாத்திரை வடிவில் வெளியிடப்பட்டுள்ள இதற்கு, ‘செலின்க்ரோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், ஒரு நாளைக்கு, ஒரு மாத்திரை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை மது அருந்துவதற்கான இச்சையிலிருந்து விடுபடலாம்.
இந்த மருந்தை உட்கொள்வதால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger