மாடு அறுப்பதை தடை செய்யுமாறு தீக்குளித்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்த போவத்தகே இந்திர ரத்ன தேரரின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது.
இந்திர ரத்ன தேரரின்; பூதவுடலுக்கு
ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் இறுதி கிரியைகள் கஹவத்தை பொராந்துவ
விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை இடம்பெற்றன.
பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புக்கு
மத்தியிலேயே இறுதி கிரியைகள் இடம்பெற்றன. இதேவேளை இறுதி சடங்கில் கலந்துக்கொண்ட
அமைச்சர் ஜோன் செனவிரத்ன உரையாற்றும் போது அங்கிருந்தவர்களில் சிலர் கூச்சலிட்டு
உரைக்கு இடையூறு விளைவித்தனர்.
இதனையடுத்து அமைச்சர் தனதுரையை இடையிலேயே
நிறுத்திக்கொண்டார்.
மாடு
அறுப்பதை தடை செய்யுமாறு வலியுறுத்தி போவத்தகே இந்திர
ரத்ன தேரர் கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு
முன்பாக தீ மூட்டிக்கொண்டதுடன் சிகிச்சை பலனின்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
(ඡායාරූප එච් එම් අරුණ ශාන්ත)
Post a Comment