இலங்கையில் 1759 சிறார்கள் மீது 2012ல் துஸ்பிரயோகம்-
தெற்காசியாவில் சிறுவர்களும் பெண்களும் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படும் நாடுகளில் முன்னிலையில் இருக்கும் இந்தியாவையும் மிஞ்சிவிடக்கூடிய வகையில் இலங்கையில் இது தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆண்டில் 1759 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
தெற்காசியாவில் சிறுவர்களும் பெண்களும் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படும் நாடுகளில் முன்னிலையில் இருக்கும் இந்தியாவையும் மிஞ்சிவிடக்கூடிய வகையில் இலங்கையில் இது தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆண்டில் 1759 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அடங்குகின்றனர் என பொலிஸ் அறிக்கைகள் ஊர்ஜிதம் செய்கின்றன.
கடந்த ஆண்டில் 547 சிறுவர் சிறுமியர் களும் 29 பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர். இவை தொடர்பாக 1194 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் பெண்களைவிட சிறுவர் சிறுமியர்களே பாலியல் துஷ்பிரயோகத்துக்குக் கூடுதலாக இலக்காகியுள்ளனர். கடந்த ஆண்டில் எல்லாமாக 3859 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
நாடெங்கிலும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. சிறுவர்கள் தொடர்பான குற்றச்செயல்கள் தொடர்பாக 1194 வழக்குகள் பதிவாகியுள்ளன. இத்துடன் 547 சிறுவர் சிறுமியர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகி மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
அதேநேரம், 29 பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தற்போது பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரையான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்யும் பொலிஸார் அதற்கான ஆதாரங்கள் இருப்பின் சம்பந்தப்பட்டவர் களுக்கு எதிராக வழக்கைப் பதிவு செய்கின்றார்கள்.
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பதற்கு கையடக்கத் தொலைபேசிகளே பிரதான காரணமாக அமைகின்றன.
காதல் என்ற போர்வையின் கீழ் ஒரு இளம்பெண்ணை ஒரு ஆடவன் மிகவும் இரகசியமாக ஓர் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் இன்பத்தை அனுபவிக்கும் போது அவன், தன் நண்பர்கள் மூலம் அல்லது தன்னிச்சையாக இயங்கக் கூடிய கமராக்கள் மூலம் இக்காட்சிகளைப் படம் பிடிக்கிறான் என்றும், பின்னர் அவற்றை சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக் காட்டி அவளை அச்சுறுத்தி தொடர்ந்தும் அந்தப் பெண்ணுடன் தன்னுடைய பாலியல் இச்சையை நிறைவேற்றி வருகிறான் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபோன்ற குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட பலர் இப்போது கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டில் அதற்கு முன்னைய ஆண்டைவிட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் பெண்களும் சிறிமியருமே இத்தகைய காமுகர்களிடம் சிக்கி வாழ்நாள் பூராவும் வேதனையை அனுபவித்து வருவதாக ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்காகும் பெண்களில் 90 சதவீதமானோர் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போதே சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இந்தப் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்றும், பொலிஸாரிடமுள்ள புள்ளிவிபரங்களின்படி இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிடத்துக்கு ஒருதடவை ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் படுகிறாள் என்பது தெரிய வந்துள்ளது.
இலங்கையில் பெண்களுக்கும் ஆண்களைப் போன்று சம அந்தஸ்து இருக்கின்ற போதிலும், நடைமுறையில் அது இதுவரை சாத்தியப்படவில்லை. இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பெண்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் 30 முதல் 40 சதவீதம் கொடுக்கப்படுகின்றது.
கூலிப்படையாக செயற்பட்ட இலங்கை இளைஞனை தேடி பொலிஸ் வலைவீச்சு-
இந்தியா, அம்பத்தூர் தொழில் அதிபர் கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த இளைஞனை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா, அம்பத்தூர் தொழில் அதிபர் கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த இளைஞனை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் மேற்கு பானுநகர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (44).
திருமுல்லைவாயல் பகுதியில் கேபிள் டிவி, இரிடியம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மனைவி மனோன்மணி (40). இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 13ம் திகதி ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டார்.
அம்பத்தூர் பொலிஸ் விசாரணைகளின் மூலம் ஸ்ரீதரை கொலை செய்தது அவரது மனைவி மனோன்மணி, இவரது தந்தை நாகரத்தினம், தம்பி ராஜா (39) ஆகியோர்தான் என்று தெரிந்தது.
அவர்களை பொலிஸார் கைது செய்தனர். விசாரணையில், இரிடியம் தொழில் செய்ய மனைவியின் நகைகள் மற்றும் மாமனாரிடம் 5 லட்சம் வாங்கியுள்ளார்.
தொழிலில் நஷ்டம் அடைந்ததால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. மேலும், கேபிள் டிவி வருமானத்தில் வந்த பணத்தை கோவையில் உள்ள கள்ளக்காதலி மைதிலிக்கு செலவு செய்துள்ளார். இதனால் ஸ்ரீதரை கொலை செய்துள்ளனர் என தெரிந்தது.
இதற்கிடையே, ஸ்ரீதர் கொலைக்கு கூலிப் படையாக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த ரியான் என்ற சுதாகர் (38) என்பவர் தலைமறைவாகிவிட்டார்.
அவரை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் வேதாரண்யம், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
மேலும், சுதாகர் பற்றி தகவல் தெரிந்தால் அம்பத்தூர் பொலிஸ் நிலையத்துக்கு தெரிவிக் கலாம். அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment