நைஜீரியாவில் ஒருபால் திருமணத்தை ஒரு குற்றச்செயலாக அறிவிக்கும் சட்ட மூலத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அங்கு இனிமேல் ஒரு பால் திருமணம் புரிபவர்களுக்கு 14-ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
இப்போது பிரதிநிதிகள் சபையும் அதனை நிறைவேற்றிவிட்டது.நாடாளுமன்றத்தின் செனட் சபை 18 மாதங்களுக்கு முன்னரே இந்த சட்டமூலத்தை அங்கீகரித்துவிட்டது.
அதிபர் குட்லக் ஜொனதன் கைச்சாத்திட்டதும் சட்டம் நடைமுறைக்கு வந்துவிடும்.
நைஜீரியாவில் ஒருபால் உறவுக் காரர்களுக்கான சங்கங்களையும் கேளிக்கை விடுதிகளையும் நடத்துவதும் இனிமேல் சட்டவிரோதமாகிவிடும்.
அதுபோல, ஒருபால் உறவுக்காரர்களின் படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதையும் இந்த சட்டம் தடை செய்கிறது.
இதேவேளை, இவ்வாறான சட்டங்கள் நைஜீரியாவில் எச்ஐவி- எயிட்ஸ் தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியுதவிகளை கடுமையாகப் பாதிக்கும் என்று விமர்சகர்கள் ஏற்கனவே கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment