சந்தேக நபரைத் தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்த சிலாபம் பொலிஸார்



பொலிஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் தனது வலது கை செயலிழந்துள்ளதாக மாதம்பைப் பகுதியில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூறியுள்ளார். 28 வயதான சஞ்ஜீவ எதிரிசிங்ஹ என்பவரே இவ்வாறு பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்.

மாதம்பை செம்புக்கட்டி பிரதேசத்தில் கடை ஒன்றை உடைத்து பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு மே மாதம் 9ம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் மே மாதம் 16ம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதுவரையான காலப்பகுதியில் தன்னை தெரியாத இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கியது மட்டுமல்லாது முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தனக்குச் செய்த அநியாயங்களை குறித்த நபர் விவரிக்கும் வீடியோவினை கீழே பார்க்கலாம்.

Share this article :

+ comments + 1 comments

July 17, 2014 at 7:19 AM

This proves the pathetic status of the poor mass and arrogant attitude of the law keepers.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger