இவ்வருடத்தின் கடந்த நான்கு மாத காலப் பகுதியில் களுத்துறைப் பகுதியில் பாடசாலை செல்லும் சிறுமிகள் 27 பேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்விதம் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான சிறுமிகளில் சிலர் கருத்தரித்துள்ளதாகவும் தாய்மார்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுச்செல்லும் போது பிள்ளைகளை உறவினர்களின் பாதுகாப்பில் விட்டுச்செல்வதே இதற்கான பிரதான காரணமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கடந்த வாரத்தில் முப்பத்துமூன்று வயதுடைய தன் காதலனுடன் களுத்துறை நகருக்கு வந்த 15 வயதுடைய மாணவியொருவர் அங்கிருந்த மலசலக்கூடத்துக்குள் சென்று தான் அணிந்திருந்த பாடசாலை சீருடையை கழற்றி விட்டு மாற்றுடைகளை அணிந்துகொண்டிருந்த போது களுத்துறை சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் அதிகார சபையினர் கைதுசெய்துள்ளனர்.
அவ்வேளையில் இம்மாணவி ஏழு வார கர்ப்பிணியாக இருந்துள்ளமை வைத்திய பரிசோதனைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.
Post a Comment