சென்னை: பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டியை சென்னை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
பத்து மாதம் ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுப்பதற்குள் பெண்களின் உயிர் போய் உயிர் வரும். ஆனால், சென்னையை சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் தனது கர்பப்பையில் அதிக தசை வளர்ச்சி பெற்ற கட்டியை சுமந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த கட்டியை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்திருக்கிறார். இந்த கட்டியின் அழுத்தம் அதிகமாக சமீபத்தில் பிறப்புறுப்பு வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மூச்சுவிடவும் அவர் சிரமப்பட்டு வந்திருக்கிறார். இதையடுத்து, சென்னை குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார்.
அங்கு சோதனை செய்து பார்த்ததில், கர்ப்பப்பையின் வெளிப்பகுதியில் 15.6 கிலோ எடை கொண்ட கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, டாக்டர் எஸ்.பி.சிவகுமார் மற்றும் டாக்டர் மணிமேகலை தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றியுள்ளனர். இதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் 9.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டதே உலக சாதனையாக இருந்தது. இப்போது 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றியிருப்பது மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. |
பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!
Related Articles
- 2050 பயணிகள் விமானம் எப்படி இருக்கும் ? உங்கள் இருக்கையில் இருந்தே மின்சாரம் அதிரும் வீடியோ !
- எந்த மொழியில் பேசினாலும் தமிழில் மாற்றும்.. ஸ்கைப் இன் அதிரடி அறிமுகம் (வீடியோ இணைப்பு)
- 60 ஒளியாண்டுகள் தூரத்தில் ராட்சத பூமி
- பல்கலைக் கழக வாய்ப்பபை தவறவிட்ட மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு. A/L இல் குறைந்தது 3S தகுதிகள்.
- அமெரிக்கா புதிதாக உருவாக்கும் Phalanx எனப்படும் Close-in Weapon Systems
- உளவியல் நோக்கில் இளையோர்.. (இளையோர் ஓர் அறிமுகம்) -எப். எச். ஏ. ஷிப்லி
Labels:
அறிவியல்
Post a Comment