வல்லுறவுக்குட்படுத்திய தந்தை: தலையை வெட்டிக் கொன்ற மகள்


வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தன்னை வல்லுறவுக்குட்படுத்திய தந்தையை மகளொருவர் தலையை வெட்டிக் கொன்ற சம்பவம் பபுவா நியூ கினியாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று இரவு குறித்த நபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இரண்டு பேரும் வெளியே சென்றிருந்த வேளையில் மற்றைய மகளை பல தடவை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
பின்னர் மீண்டும் காலையில் தனது மகளை அந்நபர் வல்லுறவுக்குபடுத்த முயன்றுள்ளார்.
இதனையடுத்து ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள முடியாத மகள் தனது தந்தையின் கழுத்தை வெட்டியுள்ளார்.
குறித்த நபரின் வயது 40 எனவும் அவரது மகளின் வயது 18 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த பெண் மீது எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது என அப் பெண் வசிக்கும் பிரதேச வாசிகள் மற்றும் அவரது சமூகத்தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் பொலிஸார் அப்பெண்ணை கைது செய்யவிடாமல் பாதுகாப்பு அளித்து வருவதுடன் அத்தந்தையின் செயலுக்கு சரியான தண்டனையையே அவர் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கொல்லப்பட்ட நபருக்கு எவ்வித மரண சடங்குகளும் செய்வதில்லை என்ற முடிவுக்கும் அவர்கள் வந்துள்ளதாக தெரிகின்றது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger