சவுதி: எதிரியின் மீது காரை ஏற்றிக் கொன்றவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம் / மருத்துவ பரிசோதனைக்கு சென்ற ஆண், பெண்ணாக இருந்தது கண்டுபிடிப்பு


 

சவுதி: எதிரியின் மீது காரை ஏற்றிக் கொன்றவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்-
முன்விரோதம் காரணமாக எதிரி மீது காரை ஏற்றிக் கொன்றவரின் தலையை துண்டித்து சவுதி அரேபியா அரசு நேற்று மரண தண்டனையை நிறைவேற்றியது.
ஷுவைல் அல்-அம்ரி என்பவருக்கும் அவரது உறவினரான முஹம்மது அல்-அம்ரி என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்தது.
முஹம்மது அல்-அம்ரியை தீர்த்துக்கட்ட நினைத்த ஷுவைல் அல்-அம்ரி, அவர் மீது காரை ஏற்றிக் கொன்றார்.
இச்சம்பவம் தொடர்பாக ரியாத் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஷுவைல் அல்-அம்ரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, சவுதியின் தென்மேற்கு பகுதியான அல்-பஹாவில் ஷுவைல் அல்-அம்ரியின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கற்பழிப்பு, கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், மத துவேஷம் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
ஷுவைல் அல்-அம்ரியையும் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைக்கு சென்ற ஆண், பெண்ணாக இருந்தது கண்டுபிடிப்பு-
ஹாங்காங்கில் வாழ்ந்து வரும் 66 வயதான ஆதரவற்ற ஒருவர், தன்னுடைய வயிறு பெருத்து வருவது குறித்து சந்தேகப்பட்டு மருத்துவரிடம் சென்றார்.
பரிசோதனையின் போது, பெண்ணுக்கு அமைந்திருக்கும் கருப்பை அவருக்கும் உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
கருப்பையில் ஏற்பட்ட கட்டி வளர்ந்ததால் அவரது வயிறு பெரிதாக ஆரம்பித்தது தெரியவந்தது.
அவருக்கு இரண்டு மரபணுக்களும் இணைந்து காணப்பட்டது. மருத்துவ வரலாற்றிலேயே இதுபோல் மொத்தம் ஆறு பேர் தான் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெண்களுக்குரிய டர்னர் என்ற நோய்க்குறி இருந்ததால் அவருக்கு குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டு கருப்பை சிறியதாக மலட்டுத்தன்மையுடன் காணப்பட்டது.
ஆயினும், சிறுநீரகச் சுரப்பி பெரியதாகவும், ஆணுக்குரிய ஹார்மோன்களும் இருந்ததால் தாடி வளர்ச்சியும், சிறிய ஆண்குறியும் இருந்துள்ளது. இது அவரை ஆண்மகனாகக் காட்டியுள்ளது.
இந்தக் கட்டி வந்திருக்காவிட்டால், அவரின் புதிரான இந்த உடலமைப்பு வெளியில் தெரிந்திருக்காது என்று திங்கள் அன்று அவரைப் பரிசோதித்த இரண்டு மருத்துவமனையைச் சேர்ந்த ஏழு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வியட்நாமில் பிறந்த அந்த சீன தேசத்தவர், ஆணுக்குரிய சிகிச்சை முறைகளை மேற்கொண்டு தொடர்ந்து ஆணாகவே இருக்கப்போவதாக மருத்துவ பத்திரிகை தெரிவித்துள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger