பாராட்டு விளம்பரங்களுக்கு தடை: பாகிஸ்தான் பிரதமர் அதிரடி



பாராட்டு விளம்பரங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தடை விதித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக அரசு பணத்தை வாரி இறைப்பதை நான் விரும்பவில்லை.
இதுபோன்ற தேவையில்லாத செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இதனை மீறியும் விளம்பரங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானிய காவல்துறை, பெட்ரோலிய துறை, நிதித் துறை உள்ளிட்டவை சாலை ஓரங்களில் நவாஸ் ஷெரீப்பை வாழ்த்தி ஏராளமான பேனர்கள் வைத்துள்ளன.
இவற்றை அகற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger