கடந்த வாரம் பசுவதைக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக பல ஊடகங்களில் பிரபல செய்தியொன்று வெளியாகியிருந்ததை.. நீங்கள் யாவரும் அறிவீர்கள். புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டதாக தான் செய்திகள் வெளிவந்திருந்தன…
ஆனால்.., எமக்கு கிடைத்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கின்ற போது.., இந்த தீக்குளிப்பு சம்பவமானது தன்னிச்சையாக சம்மந்தப்பட்ட பௌத்த பிக்குவால் செய்யப்பட்ட ஒரு சம்பவமாக தெரியவில்லை. முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த தீவிரவாதிகளை தூண்டி விடுவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாகவே கருத வேண்டியுள்ளது.
இதில் புதிதாக முளைத்துள்ள பெளத்த தீவிரவாத (பொதுபலசேனா) அமைப்பு ஒன்றின் ஆதரவுடனேயே இச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது. கண்டியில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் எதிரான செயலாகவே இச்சம்பவத்தை நாம் பார்க்கலாமே தவிர பசுவதைக்கு எதிராக பௌத்த பிக்கு தீக்குளித்ததாக இச் சம்பவத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த விடயம் ஏற்கனவே குறித்த தேரரால் அரச ஊடகம் ஒன்றின் செய்தியாளருக்கு தேரரால் தெரிவிக்கப்பட்டதாகவும்.., எனினும் குறித்த செய்தியாளர் அதனை இரகசியமாக பேணியதுடன் பௌத்த பிக்கு தமக்கு தாமே தீ மூட்டிய சம்பவத்தை முழுமையாக வீடியோ மூலம் படமாக்கினார். பின்னர், இந்த சம்பவத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஊடகவியலாளரை கைது செய்யபட்டதாக தெரிய வருகின்றது.
ஆனால் இத் தற்கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்து பௌத்த பிக்குவை தீ மூட்ட தூண்டியவர்களை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக செய்திகள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை செய்பவர்களை விட தற்”கொலை”க்கு தூண்டுகின்றவர்கள் தான் மிகவும் முக்கிய குற்றவாளிகள்.
எனவே.., முஸ்லிம் தரப்பினர் உட்பட அனைத்துத் தரப்பினரும் இவ்விடயத்தை சீரியசாக எடுத்துக் கொண்டு.., சமூகங்களுக்கிடையிலான இனமுரண்பாடுகளை தோற்றுவிப்பதற்காக சில தீவிரவாத அமைப்புகளால் உருவாக்கப்படும் இதுபோன்ற “ஈனச்செயல்”களை சாதாரண சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் இச்செயல்களை ஏன் செய்கின்றார்கள் என்கின்ற உண்மை தன்மையை வெளிகொண்டு வரலாம் என்பது எங்கள் அபிப்பிராயம்…
Post a Comment