ஒன்றரைக் கோடிக்கு மேல் நிதிமோசடியில் ஈடுபட்டவர் கைது


ஒன்றரைக் கோடிக்கு மேல் நிதிமோசடியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவினைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு பொலிஸாரால் நேற்றைய தினம் பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

7க்கும் மேற்பட்ட பிடியாணை உத்தரவுகள் உள்ள இவர், பலரிடம் தொழில் வாய்ப்புக்கள் பெற்றுத் தருவதாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் கூறி பணம் வசூலித்து வந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு சூழல் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பதிகாரி புஸ்பகுமார தலைமையிலான குழுவினரே இவரைக் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பிறைந்துறைச் சேனையைச் சேர்ந்த ஆதம்பாவா முகமது ஜிப்ரிஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger