தோஷத்தை கழிக்க யுவதியை நிர்வாணப்படுத்திய கப்புறாளை - மூடநம்பிக்கையின் விபரீதம்!



தன்னை பிடித்திருக்கும் தோஷத்தை கழிப்பதற்காக வந்த 17 வயதான யுவதியை நிர்வாணப்படுத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற கப்புறாளையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியின் உடல்முழுவதும் எண்ணெய் பூசி தேசிக்காய் வெட்டுவதற்கு முன்னர் அந்த யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற கப்புறாளையையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கப்புறாளையை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொல்கஸ்வோவிட்ட சியம்பலாகொட ஜாம்கஸ் சந்தியைச்சேர்ந்த 51 வயதான சந்திரசிறி பெர்னாண்டோவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதிக்கு ‘மன்மத தோஷம்’ பிடித்திருப்பதனால் அவருக்கு இவ்வாறான முறையிலேயே தோஷத்தை கழிக்கவேண்டுமென கப்புறாளை தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் குறித்த யுவதியை பல நாட்கள் நிர்வாணமாக்கி அந்த யுவதியின் உடல் முழுவதும் எண்ணெய் பூசியுள்ளார்.
பல நாட்கள் எண்ணெய் பூசியதன் பின்னர் தேசிக்காய் வெட்டுவதற்கு நாளொன்றை குறித்துள்ளார். அன்றையதினம் யுவதி வந்ததும் அன்றும் யுவதியை நிர்வாணப்படுத்தி உடல்முழுதும் எண்ணெய்பூசியதுடன் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்துவதற்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து தப்பிவந்த யுவதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டையடுத்து இந்த கப்புறாளையை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger